புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

31 March 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன் விடுத்துள்ள அறிக்கை:மாணவர்கள் பிட் அடித்தால் கண்காணிப்பாளர் சஸ்பெண்டை கண்டித்து 1ம் தேதி ஆர்ப்பாட்டம் முதுநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

Dinakaran Dharmapuri தமிழகத்தில் 1980ம் ஆண்டு முதல் பிளஸ்2 பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. துவக்கத்தில் 38 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம் தற்போது 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் தேர்வு துறை தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேல் எடுக்க நினைக்கிறது. தேர்வு நடக்கின்ற மையங்களுக்கு இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகள், மாணவர்களின் ஆடைக்குள் கையை விட்டு சோதனை செய் வதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். 

மனஅழுத்தங்க ளோடு தேர்வு எழுத வரும் மாணவனையோ, மாண வியையோ மனரீதியாக வோ, உடல் ரீதி யாக வோ துன்புறுத்துவது மனித உரிமை மீறிய செய லாகும். பள்ளி நேரங்களில் மாணவர்களை திட்டினால் விசாரணை என ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பள்ளி கல்வி துறை, தேர்வு நேரங்களில் துன் புறுத்துவதை கண்டு கொள்வதில்லை. 

தேர்வு அறைகளில் மாணவர்கள் பிட் பேப்பர் வைத்திருப்பதை பறக்கும் படை உறுப்பினர்கள் கண்டுபிடித்தால், அறை கண்காணிப்பாளர்கள் மீது பணி இடை நீக்கம் போன்ற அதிரடியான நடவடிக்கைகளை பள்ளி கல்விதுறை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தேர்வு பணிக்கு வர அச்சப்படுவார்கள். எனவே, பள்ளி கல்விதுறையின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் ந டத்தப்படும். இவ்வாறு மணிவாச கன் தெரித்துள்ளார்.

No comments: