புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

25 October 2016

தருமபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் சந்திப்பு

TNHSPGTA DHARMAPURI

முதன்மைக்கல்வி அலுவலர்
அவர்களுடன் சந்திப்பு
  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில்,
மாவட்ட தலைவர்
ஈ.ப.தங்கவேல் தலைமையில்
தருமபுரி  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை (17.10.2016)  திங்கட்கிழமை மாலை  சந்தித்தனர்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் திரு.கா.காவேரி,
மாவட்ட பொருளாளர் திரு.சுப்பிரமணியன்,
மாவட்ட துணைத் தலைவர் திரு.நாகேந்திரன்
ஆகியோர்  முதன்மைக்கல்வி அலுவலர்  திருமதி.மகேஸ்வரி அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

மாநில செய்தி தொடர்பாளர் திரு. ரா.செல்வம், மாநில துணைத்தலைவர் திரு.சேகர், மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
✅தற்போது முதுகலை ஆசிரியர்களில் பலர்,  பகுதி நேரத்தில்  எம்ஃபில் (M.Phil) உயர்க்கல்வி  படிக்க விரும்புகின்றனர். 
உயர்க்கல்வி  பயில  அனுமதி, 
பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் மற்றும் தேர்வுநிலை உள்ளிட்ட ஆணைகளை சிறப்பு முகாம்  நடத்தி வழங்க முதன்மைக்கல்வி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஜி.ஆரோக்கியம்,
மாவட்டசெய்தி தொடர்பாளர்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA),
தருமபுரி மாவட்டம்

No comments: