புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

29 December 2015

கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள்

1 . HOME SCHOOL MATHS.NET .
      தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று
கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல்முறைகள்,வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது;
2. MATHWAY.COM
    கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை
விளக்கத்துடன் தருகிறது இந்த தளம்.

23 December 2015

12th Bio - Zoology Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Bio - Botany Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Chemistry Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Physics Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Maths Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Geography Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Economics Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th History Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Commerce Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Accountancy Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Zoology Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Botany Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Physics Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Chemistry Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Accountancy Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Commerce Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Economics Study Materials for slow Learners/ Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th History Study materials for slow learners/Tamil medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Geography Study Materials for Slow learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Maths Study Materials for Slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

21 December 2015

தோல்வியின் அடையாளம் "தயக்கம்"  வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"...  துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!

தோல்வியின் அடையாளம் "தயக்கம்" 
வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"... 
துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!

* வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது, 
புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது

* அழும் போது தனியாக அழு..!! சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!!
ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.!தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.! 
புரிந்து கொள்ள முடியாத உலகம் நீயாவது புரிந்து கொள்.!!

* சொன்ன ஒரு சொல் / விடுபட்ட அம்பு / கடந்து போன வாழ்க்கை / நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது."

* வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும், 
உனக்குள் உள்ள உனது பலத்தை உனக்கு புரியவைக்கும் 
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்... 
நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசப்படனும்... 
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படனும்.

19 December 2015

மாவட்டக் கல்வி அலுவலர்கள் நம்மை கேள்வி கேட்பதோ நாம் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கவோ எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அவ்வாறு ஓரிருவர் அவ்வாறு நடக்க எத்தனித்தால் நீங்கள் வகுப்பை விட்டு வெளியே வந்து விடுங்கள்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA)மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன்  அவர்களின் செய்தி 
நமது மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

       பள்ளிக்கு வருகை தரும் அதிகாரிகளில் முதுகலை ஆசிரியர்களை பாடம் சம்மந்தமாக கேள்வி கேட்கும் உரிமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அவருக்கு மேல் உள்ள பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே கேள்வி கேட்க முடியும்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் நம்மை கேள்வி கேட்பதோ நாம் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கவோ எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அவ்வாறு ஓரிருவர் அவ்வாறு நடக்க எத்தனித்தால் நீங்கள் வகுப்பை விட்டு வெளியே வந்து விடுங்கள்.
மாவட்டக் கல்வி அலுவலர் நேரடி நியமன முதுகலை ஆசிரியராக பணியாற்றி கூட பதவி உயர்வு பெற்றிருக்கலாம். அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. எந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கும் நம்மை கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. இதனை ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களும் அறிந்து கொண்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் தெளிவு படுத்த வேண்டும்.
நமக்கென்ன என இருப்பதற்கு பொறுப்புகள் தேவையில்லை. பொறுப்பு என்று எங்கு வந்தாலும் மன அழுத்தம் இருக்கும். இதனை ஏற்றுக் கொண்டு செயலாற்றும் போதுதான் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் வெற்றி பெற முடியும்.
தற்போது பணியேற்றிருக்கும் சில முதுகலை ஆசிரியர்களுக்கு தஙகள் பணிசார்ந்த நிகழ்வுகளில் உரிமையை விட்டுக் கொடுக்கிறார்களோ என்ற அச்சம் எனக்கு உள்ளது.
கட்செவியில் பல புரட்சிகரமான செய்திகளைக் கொண்டு வரும் நமது இளைய வரவுகள்,  அதிகாரிகள் என்றவுடன் நாம் 37 ஆண்களாக போராடிப் பெற்ற சுயமரியாதையை உரிமைகளை விட்டுக் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சமும் அவ்வப்போது நெஞ்சிலே ஊசலாடுகிறது.
சில மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட எது நடந்தால் என்ன என நினைப்பதை போன்று உணர்கிறேன். நம்மிலே சில ஆசிரியர்கள் நம்மை ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். அதிகார வர்க்கம் என்று வந்து விட்டால் கூனிக்குறுகி அடங்கி விடுவார்கள். இவ்வாறு உள்ளவர்கள் பாதிக்கப்படும் போது நாமே களத்தில் இறங்கி அவர்களையும் நமது பணித் தொகுதியின் சுயமரியாதையையும் பாதுகாக்க வேண்டும். ஏதோ இதனை விளையாட்டாக மாவட்டப் பொறுப்பாளர்கள் கருதக் கூடாது. முதுகலை ஆசிரியர்களின் பணித் தொகுதியின் சுயமரியாதையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களிடத்திலே உள்ளது என்பதனை நெஞ்சிலே நிறுத்துங்கள்

வே.மணிவாசகன்
மாநில தலைவர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA)

நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?

குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும்.
- ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர்

நீங்கள் குருவா? ஆசிரியரா...? என வினவிக் கொண்டபோது நமக்கு கிடைத்த விடை என்னவாக இருந்தது...? இன்னும் கொஞ்சம் தூர் வாரினால் அந்த அறிவுக்கேணி உங்கள் உண்மை முகத்தை தோண்டி எடுத்துக் கொடுத்துவிடும். கடந்த நம் அத்தியாயத்தை வாசித்து என்னிடம் கருத்து பரிமாறிய புதுவை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான ஒன்றை குறிப்பிட்டார். அவர் கூற்றுப்படி ஆசிரியர்கள் இரண்டு வகை. ஒருவர் ஆசிரியராகவே வாழ்பவர். மற்றவர் ஆசிரியர் வேலைக்குப் போய் வருபவர். இக்கூற்றை நான் பரிசீலித்தபோது வியப்பான முடிவுகளை அடைய முடிந்தது. ஆசிரியராகவே வாழ்பவர்தான் முன் உதாரண ஆசிரியர். இவர் மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்பவர். காலத்திற்கேற்ற மாறுதல்களை மனமுவந்து ஏற்பவர். இலட்சியத்தால் எழுச்சி காண்பவர்.

இவரது இலக்கு கல்வி மற்றும் கதறல் செயல்பாடு மட்டுமே அல்ல. மாணவர்களின் வாழ்வை மேம்படுத்துதல், அவர்களது சிந்தனைத்திறனை மேம்படுத்துதல். பாடப்புத்தகம் என்பது ஒருவகை வழிகாட்டி மட்டுமே. இவரைப் பொருத்தவரை கல்வி வகுப்பறையில் மட்டுமே நடப்பது அல்ல. குழந்தைகள் காலை கண் விழித்தெழுதல் முதல் இரவு உறங்கப்போகும் அந்த நிமிடம் வரை, பார்ப்பது, கேட்பது, அனுபவிப்பது எல்லாமே கல்வியில் அடக்கம். எந்த வயது மாணாக்கரை இவரிடம் ஒப்படைத்தாலும் முகம் கோணாது செயல்படுவார். தனது வாழ்வை, தனது ஆசிரியப் பணியிலிருந்து பிரித்துணர முடியாதவர் இவர். மாணவர் நலனை முன்வைத்து இயங்குபவர்.

ஆசிரியர் வேலைக்கு, கடனே என போய்வரும் ஒருவரை பரிசீலிப்போம். முதலில் அத்தகைய ஒருவருக்கு அப்பணி நிரந்தரமானதல்ல. அடுத்த படி நிலைகளை வாழ்வில் சாதித்து முன்னேற ஒரு தற்காலிக ஏற்பாடு இப்பணி. பெரும்பாலும் ஆசிரிய பணியாளரின் இலட்சியம், மாணவர் சார்ந்ததாக இருப்பது கிடையாது. ஏதோ ஒரு உபதொழிலை (Side Business) இவர் செய்கிறார். தனது வருமானத்தை குறிவைத்து திட்டமிட்டு  காய் நகர்த்துகிறார். இவருக்கு தன் வேலையில் கால அளவு முக்கியம். ஒரு மணி நேரம்கூட கூடுதலாக மாணவர்களுக்கு செலவு செய்ய மாட்டார். மாலை வகுப்பு நடத்தவோ, கல்வி உபசெயல்பாட்டுப் பணிகள் செய்யவோ இவருக்கு விருப்பமிருப்பதில்லை. ஆனால் ஊதியம் என வரும்போது எந்த சமரசமும் இவரிடம் செல்லாது.

நாள்முழுவதும் இவரது கைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். தனது பணி, பள்ளியின் முதல் மணியின்போது தொடங்கி மாலை கடைசி மணி அடித்தால் முடிந்தது என கருதுபவர்; அதிலும்  ஓய்வான பிரீயட்களில் வாய்ப்பு கிடைத்தால் எஸ்கேப் ஆகிவிடுவது இவரது வேலை இயல்புகளில் ஒன்று. தேர்வு விழுக்காடு என்பது அதிகாரிகளால் தன்மீது திணிக்கப்பட்ட சுமை என்று கருதி எரிந்து போகிறவர். அதற்காக மாணவர்களை சபித்துத் தள்ளுபவர். இவரைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் மட்டுமே நடக்கிறது. பாடப்புத்தகமே வேதம். இத்தகையவரிial, Helvetica, sans-serif; fontுமா? டியூஷன் சென்டர் நடத்துவது! தனது சொந்த நலனை முன்வைத்து இயங்குபவர் இவர்.

* ஒரு மாணவர் பள்ளிக்கு இரண்டு மூன்று நாட்கள் வரமுடியவில்லை என்றால் ஆசிரியராக வாழ்பவர், மாணவர் வீட்டிற்கேகூட சென்று, என்ன ஆயிற்று என அறிந்துகொள்ள தயங்கமாட்டார்.

* ஆனால் ஆசிரியப் பணியாளர் அப்படியல்ல. பள்ளிக்கு வந்தால் நடத்துவார். வராதவர்களுக்கு அவர் பொறுப்பல்ல. பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்தால், தான் பணி செய்ய தயார் என வீரவசனம் பேசுவார்.

* ஆசிரியராக வாழ்பவர் தனது வகுப்பில் உள்ள அனைவரைப் பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பார். மாணவர்களின் பெற்றோர்களோடும்  இணக்கமான உறவை பேணுவார். அக்கறை என்பதே அவரது அணுகுமுறை.

* ஆசிரியப் பணியாளர் தனது உபதொழில் (Side-Business) சார்ந்து, ஓரிருவரை (பெற்றோர்) பயன்படுத்த அறிந்து பின்தொடர்வார். ‘அதிகாரம்’ என்பதே இவரது அணுகுமுறை. ‘வருமானம்’ என்பதே அவரது இலக்கு.

* ஆசிரியராக வாழ்பவர், பள்ளி நேரம் கடந்தும் மாணவர்கள் என்ன மாதிரி தன் பொழுதை போக்குகிறார்கள் என அறிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு மாணவரிடமும் அவரது அன்றாட அணுகுமுறை மாறுபடும்.

* ஆசிரியப் பணியாளர் பாடப்பொருள் சார்ந்தவர். அதை முடிப்பதும் அது சார்ந்த ‘வேலை-முடித்தல்’ பற்றியே சிந்திப்பவர்.

* ஆசிரியராக வாழ்பவர், மாணவர்களின் நிலை சார்ந்து  ஒரு பாடத்தை பலமுறை பலவிதமாக எத்தனை முறை கேட்டாலும் எத்தனைபேர் கேட்டாலும் திரும்ப விவரிக்க தயங்க மாட்டார். அதை தனது பேறாக, பெருமையாக கருதுவார்.

* ஆசிரியப் பணியாளர் பாடத்தை ஒருமுறை நடத்தவே சம்பளம் என பகிரங்கமாக சொல்வார். மறுமுறை அதை நடத்த வேண்டி வந்தால் அதை மிகப் பெரிய பாரமாக கருதி குமைந்துகொண்டே இருப்பார். ‘வேண்டுமானால் வீட்டுக்கு வா... டியூஷனில் கவனி... அதற்கும் பீஸ் கொடு...’ என்பதே அவரது அணுகுமுறை.

* ஆசிரியராக வாழ்பவர் அடுத்த தலைமுறை தன்னை கண்காணிக்கிறது என்ற புரிதலுடனே எதையும் செய்பவர். தனது அன்றாட பழக்க வழக்கங்களைக்கூட குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்கிற தெளிவோடு தன் வாழ்வை சுய கட்டுப்பாடு எனும் தூய்மை நெறியில் செலுத்துபவர்.

* ஆசிரியப் பணியாளர், பணி நேரத்தில்கூட சுய கட்டுப்பாட்டை இழப்பதை நாம் பார்க்கலாம். மாலையில், இரவில் அவர் எங்கும் செல்வார், எதையும் செய்வார். பள்ளியில் வீட்டு வேலை வாங்குவது, கைபேசியில் படம் பார்ப்பது, போதை பாக்கு, புகைத்தல்.. இவற்றோடு மதுக்கடை மகராசனாகவும் இருப்பதை பார்க்கலாம். அதுபற்றி அவருக்கு எந்த கூச்சமும் கிடையாது.

* ஆசிரியராக வாழ்பவர் சபலங்களுக்கு இடம் தரமாட்டார். மாணவர் மற்றும் மாணவியரை அவர்கள் +2 படிக்கும் வயதினராக இருந்தாலும் குழந்தைகளாக அணுகத் தெரிந்தவர். இவரது வகுப்பறையை, ‘உலகிலேயே பாதுகாப்பான இடம்’ என்று மாணவர்கள் கருதுவார்கள்.

* ஆசிரியப் பணியாளர் தனது அதிகாரத்தின் மீதே கவனமாக இருப்பதால் விதி மீறல்களை கட்டுப்படுத்துவதில்லை. விதிகளை சரிவர அறிவதும் இல்லை. பால்ய வன்முறையிலிருந்து பாலியல் வன்முறை வரை சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப எதையும் செய்வார்கள். வகுப்பையே தனது மிரட்டலில் வைத்திருக்க இவர்கள் வெட்கப்படுவதே இல்லை. பொறுப்பற்ற இவர்கள் சபலங்களுக்கு பலியாகி இழைக்கும் வக்கிர குற்றங்களால் முழு ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைகுனிவே ஏற்படுகிறது.

* ஆசிரியராகவே வாழ்பவர், மாணவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என கருதுவார். மாணவர்கள் அளவுக்கு இறங்கிச்சென்று அன்பு, தோழமை, நட்பு என உறவை விரிவடையச் செய்வார். வாசிப்பை, கற்றலின் இனிமையை விதைப்பவர்.

* ஆசிரியப் பணியாளர், மாணவர்கள் தன்னைக் கண்டாலே நடுங்க வேண்டும் என கருதுவார். கற்றலைச் சித்திரவதையாக்கி விடுவார்.

* ஆசிரியராக வாழ்பவர், குழந்தைகள் நலப் போராளியாக இருப்பதை நாம் காணலாம். குழந்தைகளுக்கு  எதிராக நிகழ்த்தப்படும் எத்தகைய அநீதியையும், சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் தடுத்திட முழு மூச்சாக இறங்குபவர். குழந்தை திருமணங்கள், நரபலி, குழந்தையை வேலைக்கு அமர்த்துதல்் என இவரது கண்களில் இருந்து எதுவும் தப்பாது. தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத்தையும் இதுமாதிரி வேலைகளில் ஈடுபடச் செய்வார்.

* ஆசிரியப் பணியாளர், ‘நமக்கேன் வம்பு’ என எதையும் கண்டுகொள்ள மாட்டார். வாய்ப்புக் கிடைத்தால் அச்செயல்களில் தானும் இறங்குவார். ‘இவர் செய்யலையா... அவர் செய்யலையா’ என வறட்டு வாதம் பேசுதல்... இதன் குற்றச்சாட்டிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத் தலைவருக்கு நெருக்கடியும் தர தயங்க மாட்டார்.

* ஆசிரியராகவே வாழ்பவர்... குழந்தைகளுக்கு தான் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதன் மீது கவனம் கொள்வார்.

* ஆசிரியப் பணியாளர், தனக்கு எப்படி எல்லாம் இருந்தால் பிடிக்கும் என்று குழந்தைகளை மிரட்டி வைப்பார். இதில் வன்முறை இல்லா வகுப்பறை யாருடையது...?
நீங்கள் யார்? ஆசிரியராகவே வாழ்பவரா...? ஆசிரியப் பணியாளரா...?

30 September 2015

மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற, மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற பாராட்டுவிழா

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களுக்கு இலண்டன்,உலக தமிழ் செம்மொழி பல்கலைக்கழகத்தால்மதிப்புறு  முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. மாநில கழகத்தின் சார்பாக  சிதம்பரத்தில் நடைபெற்ற பாராட்டுவிழா 







17 September 2015

உங்கள் CPS STATEMENT தெரிந்துகோள்ள வேண்டுமா?

உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்


ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது.மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மருத்துவம், என்ஜினீயரிங்உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம்.இந்த திட்டத்தின்படி உள் நாட்டில் படிக்க அதிக பட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.மாணவர்கள் பெறும் கடன் ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் இருந்தால் வட்டி தொகையுடன் ஒரு விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும்.ஆனால் வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுதலுக்குரியது.ரூ.4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பது இல்லை. ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் தொகை கேட்டால் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இதில் தான் தற்போது மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெறுபவர்கள் எந்தவித ஜாமீனோ அல்லது உத்தரவாதமோ அளிக்க தேவையில்லை. இந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இதை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின்படி கடன் தொகையை மாணவர்கள் 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் சலுகையும் இடம் பெறுகிறது. படிப்பு முடிந்து வேலை கிடைத்த ஒரு ஆண்டு அல்லது படிப்பு முடிந்த 1 ஆண்டுக்கு பிறகு கடனை திரும்ப செலுத்த வேண்டும். முன்பு வேலை கிடைத்த 6 மாதம் என்று இருந்தது. மேலும் கல்விக் கடனை புதிய திட்டத்தின்படி வட்டி விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் இருக்காதுஎன்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 5 ஆண்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்க இருக்கிறது. முதல் ஆண்டுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது.

11 September 2015

TNHSPGTA SPECIAL MEETING AT TRICHY ON 12.09.2015

             An important meeting will be held on Tomorrow 12/09/15 AM Saturday  at Trichy Syed moorsha HSS(Marakadai stop) regarding State President  felicitation function. All the State  0ffi. Bearers/Zonal sec /Dt Pre/Sec. should attend.

With concern,
Prabakaran. R
State General Secretary

TNHSPGTA


5 September 2015

முனைவர் பட்டம் பெற்ற நம் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் அவர்களுக்கு அனைத்து மாவட்ட அமைப்பு சார்பாக பாராட்டு விழா கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 26:09:15 சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

அன்புடையீர், வணக்கம்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து நிலை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணியில் மிடுக்கைக் கொண்டு வந்ததில் காவலராகவும் ,பணிச்சூழலில் அவர்களுக்கு ஒரு இடையூறு என்றால் குரல் கொடுக்கும் சிங்கமாகவும், கனவிலும், நனவிலும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தையும்.மாநிலத்தலைவர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் பற்றி புறங்கூறியும், அவதூறு பரப்பியும், வதந்தி பரப்பியும் வாழ்க்கை நடத்தும் பதர்களுக்கு பேச்சால் பதில் தராமல், முதுகலை ஆசிரியர்களின் பணித்தொகுதி பாதிப்புகளைக் களைந்து செயலால் பதில் தருவதில் தன்னிகரில்லாத தலைவராகவும், நம்மைப் பற்றி யார் குறை கூறி பேசினாலும், அவர்களைப் பற்றியும், கோயபல்ஸ்களின் அமைப்பு பற்றி உங்கள் வாயால் எதுவும் கூறக்கூடாது என்று சொல்லும் பெருந்தன்மை மிக்கவராகவும், முதுகலை வேதியியல் ஆசிரியராக இருந்தாலும், நம் செந்தமிழை உச்சரிப்பதிலும், பேசுவதிலும், எழுதுவதிலும் தமிழ்ப்பேரறிஞர் தேவநேயப்பாவாணரின் மாணவர் போலவும், பள்ளியில் பணியோடு, சிறு கூடுதல் பொறுப்பு கிடைத்தாலே பிறரை ஏற, இறங்க பார்ப்பவர்களுக்கு மத்தியில்,தனக்கு எந்த பதவி உயர்வும் வேண்டாம், முதுகலை ஆசிரியர் பணித்தொகுதி உயர்வடைந்தால் போதும் என பாடுபட்டு வருவதில் தியாகத்தின் உருவமாய் வாழ்ந்து வருபவரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவராக இருந்து வருபவராம் ஐயா, உயர்திரு, வே.மணிவாசகன் அவர்களின் சேவையைப் பாராட்டி தமிழ் செம்மொழி பல்கலைக்கழகம் அன்னாருக்கு முனைவர் பட்டம் அளித்து பெருமை படுத்தியுள்ளது. முனைவர் பட்டம் பெற்ற நம் மாநிலத் தலைவர் அவர்களுக்கு அனைத்து மாவட்ட அமைப்பு சார்பாக பாராட்டு விழா கூட்டம்  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 26:09:15 சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன. எனவே அனைத்து நிலை  மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள், நண்பர்கள்,  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இச்செய்தியையே அழைப்பாகக் கொண்டு பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் தங்களின் மேலான வருகையை எதிர்நோக்கும் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் அடங்கிய விழாக்குழுவினர்.
(இந்த செய்தியை படிக்கும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தம் பள்ளி சக ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும், இச்செய்தியைப் பகிரும்படி அன்புடன் வேண்டுகிறோம்).
நன்றி கலந்த வணக்கத்துடன்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.தமிழ்நாடு.


அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

ஆண்டு விழாவுக்காக அன்று பள்ளி விடுமுறை.சிறுவன் ஒருவன் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கு சென்றான்.அங்கு தோரணம் கட்டிக்கொண்டிருந்தனர்.ஊர் மக்கள் எல்லோரும் பள்ளி தலைமையாசிரியருக்கு மரியாதை செலுத்தினர்.இதை பார்த்த சிறுவனுக்கு அடடா உலகிலேயே உயர்ந்த பதவி H.m தான்
என்று நினைத்தான். சிறிது நேரத்தில் D.e.o வந்தார். அவரை பார்த்த H.m ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்தவன் Deo தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில்Ceo வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால்Ceoதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் Jd வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் Jdதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும்  கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிரேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து யா இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்ஞாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று நினைத்துக்கொண்டானாம்.

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

2 September 2015

நம் மாநிலத் தலைவர் உயர்திரு. வே.மணிவாசகன் ஐயா அவர்களின் சேவையைப் பாராட்டி. முனைவர் விருது

மிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்   மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும்   முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் நலனுக்காக ,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் அற வழியில்  குரல் கொடுத்தும்,தொடர்ந்து போராடி வரும்   நம் மாநிலத் தலைவர் உயர்திரு. வே.மணிவாசகன் ஐயா அவர்களின் சேவையைப் பாராட்டி. முனைவர் விருது அளித்து பாராட்டு தெரிவித்த தமிழ் செம்மொழிப்பல்கலைக்கழகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.விருது பெற்ற மாநிலத் தலைவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னார் நல்ல ஆரோக்கியத்தையும்,நீடித்த வாழ்நாளையும் பெற்று வாழ்க வளமுடன் என மனமுவந்து வாழ்த்துகிறோம்.நல்ல நிகழ்வுகள் தொடரட்டும்

30 August 2015

தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அனைத்து காலிப்பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை கலந்ததாய்வை புறக்கணிக்கிறது

தருமபுரி  மாவட்டத்தில் இன்று 24.08.15 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.  கலந்தாய்வு  தொடங்கியவுடன் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால்  தருமபுரி மாவட்டத்தில்பல்வேறு காலி பணி இடங்கள் மறைக்கப் பட்டிருக்கிறது   குறிப்பாக தருமபுரி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி கணிதபணி இடம், கடகத்தூர், லளிகம் போன்ற பள்ளிகளில் தமிழ் பாடங்கள், காரிமங்கலம் தாவரவியல் பாடங்கள் உள்ளிட்ட ஏராளமான  இடங்கள் மறைக்கப் பட்டுள்ளது.
இதை கண்டித்து தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்  அனைத்து பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை  கலந்ததாய்வை  புறக்கணிக்கிறது.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் செல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் அஜீஸ், மாவட்ட பொருளாளர் வையாபுரி,  மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், தலைமை இட செயலர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர்  ஆரோக்கியம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், ஏராளமான  ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர்  

                                     

                                        

27 August 2015

மாநில பொதுக்குழு கூட்டம் - வேலூர் அனைவரும் வருக! வருக !!

   மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் வேலூர் மாவட்டத்தில்  29/08/2015 சனிக்கிழமை 10 மணி அளவில் நடைபெறுகிறது. 
 இடம் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி , வேலூர்  to சித்தூர் சாலை தொடர்புக்கு:
திரு.  பாஸ்கரன், வேலூர் மாவட்ட தலைவர் 
80125 28411 





22 August 2015

தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அனைத்து காலிப்பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை கலந்ததாய்வை புறக்கணிக்கிறது

தருமபுரி  மாவட்டத்தில் இன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.  கலந்தாய்வு  தொடங்கியவுடன் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால்  தருமபுரி மாவட்டத்தில்பல்வேறு காலி பணி இடங்கள் மறைக்கப் பட்டிருக்கிறது   குறிப்பாக தருமபுரி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி கணிதபணி இடம், கடகத்தூர், லளிகம் போன்ற பள்ளிகளில் தமிழ் பாடங்கள், காரிமங்கலம் தாவரவியல் பாடங்கள் உள்ளிட்ட ஏராளமான  இடங்கள் மறைக்கப் பட்டுள்ளது.
இதை கண்டித்து தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்  அனைத்து பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை  கலந்ததாய்வை  புறக்கணிக்கிறது.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் செல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் அஜீஸ், மாவட்ட பொருளாளர் வையாபுரி,  மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், தலைமை இட செயலர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர்  ஆரோக்கியம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், ஏராளமான  ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர்  

21 August 2015

தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதுகலை ஆசிரியர் காலி பணி இடங்கள் விவரம்



www.tnhspgtadharmapuri.blogspot.in

DHARMAPURI DISTRICT  PG Vacancy

TAMIL
1 KADAGATHUR
2 LALIGAM

ENGLISH
1  KADATHUR  BOYS
2  KADATHUR BOYS
3  VENKATAMPATTI
4  THEERTHAMALAI
5  KRISHNAPURAM
6  HALE DHARMAPURI
7  HARUR GIRLS
8  MUKKAREDDIPATTI GIRLS
9  LALIGAM


PHYSICS
1  AMMANIMALLAPURRAM
2. IRUMATHUR
3  PALACODE BOYS
4  DHARMAPURI BOYS

CHEMISTRY
1  RAMIYAMPATTI
2 MUKKALNAICKANPATTI
3 MUKKAREDDIPATTI GIRLS

MATHS
1  DHARMAPURI GIRLS


ECONOMICS
1  P.GOLLAPATTI
2  PAPPIREDDIPATTI  BOYS


BOTANY
1  PAUPARAPATTI GIRLS (BIOLOGY)
2  MORAPPUR GIRLS
3  KARIMANGALAM GIRLS

www.tnhspgtadharmapuri.blogspot.in

ZOOLOGY
1  PULIKARAI
2  MUKKAREDDIPATTI GIRLS
3  BOMMAHALLI (BIOLOGY



HISTORY
1.MARANDAHALLI GIRLS\
2.ADHIYAMANKOTTAI BOYS
3 MANGARAI
4  PALAYAMPUDUR
5  DHARMAPURI BOYS
6  BOMMAHALLI

PLITICAL SCIENCE
1.PAPPIREDDIPATTI BOYS

PHYSICAL DIRECTOR
1  B.MALLAPURAM BOYS
2  PENNAGARAM GIRLS
3  PAUPARAPATTI

www.tnhspgtadharmapuri.blogspot.in


18 August 2015

கலந்தாய்வு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆசிரியர் காலிப்பணி இடங்களை வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை


     
        2015-16ம்  கல்வி ஆண்டிற்க்கான  பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 22.8.2015ல் நடைபெற உள்ளதால்,  தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான அனைத்து காலிப்பணி இடங்களையும், கலந்தாய்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு , ஒளிவு மறைவின்றி  வெளிப்படையான கலந்தாய்வு நடத்த கேட்டு கொள்கிறோம்.

     மனமொத்த மாறுதல் வழங்கும்போது உரிய விதிகளின்படி மாறுதல் வழங்கிட  கேட்டுக்கொள்கிறோம்.

        மாவட்ட தலைவர்.இ.பி.தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் ஆர். செல்வம், மாவட்ட பொருளாளர் ச.வையாபுரி, மாவட்ட துணைத் தலைவர் .காவேரி , மாவட்ட அமைப்பு செயலாளர் கா. அருண்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர்  ஆரோக்கியம்  ஆகியோர், தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி  அவர்களிடம் மேற்கண்ட கோரிக்கைகளை வைத்தனர் .

30 July 2015

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

18 July 2015

Press & District Collectors phone numberd

Puthiyavan@vinoth: உங்களுக்கான பிரச்சினைகள் தொடர்கிறதா
தீர்வு கிடைக்கவில்லையா.
கவலை வேண்டாம்
இவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்...

அவசரதேவைகளுக்கு
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்....

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH
Office : 044 2567 0099
Intercom : 5618
Residence : 044 2235 1313

CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA
Telephone No : 044 2567 2345
Intercom : 5666

LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT
Telephone No. : 044 2567 0821, 2567 0271/104
Residence: Telephone No. : 044 2376 4377

SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L.,
Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111
Residence Telephone No : 2615 6146

Kalaignar Karunanidhi
FB ADMIN 9941127722 (admin)
Kalaignar Arangam
+(91)-44-24327261, +(91)-9444221426

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
+91 – 44 – 2813 07 87
+91 – 44 – 2813 22 66
+91 – 44 – 2813 3510

தமிழக செய்தி ஊடகங்கள்

www.dailythanthi.com
044 2538 7731

dinakaran daily newspaper
Ph: 91-44-42209191 Extn:21102
Ph: 91-44-42209191 Extn:21240, 21241

To send articles for Dinamani Daily -
dinamanimds@dinamani.com
+91-44-2345 7601 - 07

The Hindu (Head Office)
+(91)-7299911222, 9710011222, 9710929060, 9884024167, 9841725344, 9841810070, 9841245778
+(91)-44-28576300, 28575757, 28589060, 28575711, 28575714, 28410643, 28416250, 28575729, 28576309, 28418297 .
+(91)-44-28415325, 28416290

புதிய தலைமுறை - New Generation Media Corporati...
+(91)-44-45969500, 45969530
+(91)-8754417308
Puthiya Thagaval The News
+(91)-9382222900

Sun Network
+(91)-9844154181
Sun TV Network Ltd (Corporate ...
+(91)-44-44676767, 42059595

Raj Television Network Ltd
+(91)-44-24352926, 24351898, 24334376, 24334150, 24334149, 24334151, 24351307
+(91)-44-24341260, 24336332

Vijay TV
+(91)-44-39304050, 28205562, 28316000, 28224722
+(91)-44-28224755

Jaya TV
+(91)-44-43960000, 43960144

News 7 Tamil
+(91)-7708384077
+(91)-44-40300777, 40777777

Tamil News
+(91)-44-28544460, +(91)-9600646353
Tamil News Agency
+(91)-44-26156783

தமிழக மனித உரிமை அமைப்புகள்

International Human Rights Association
+(91)-8807708423
Human Rights Council Of India
+(91)-22-28978877, +(91)-9619774060
Human Rights Association Of India
+(91)-22-22813876, +(91)-9320111118
Human Rights Foundation
+(91)-9321451179, 9819390199
Human Rights Association Of India
+(91)-9870731819
Human Right's India
+(91)-22-24944704, +(91)-9987876587
HUMAN RIGHTS ORG (Regd.)
+(91)-9702820786
[05/06 11:32 am] Puthiyavan@vinoth: சென்னை மற்றும் சுற்றுவட்டார
பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு
மற்றும் +2 முடித்த மாணவ
மாணவியர் கவணத்திற்கு,
சென்னையில் உள்ள இனைப்பு (ரயில் )
பெட்டி தொழிற்சாலையில் ஆக்ட்
அப்ரேண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்ப
படிவம் வழங்க பட்டுவருகிறது .......
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு
கொள்ளுங்கள் , நம் தமிழக
மாணவர்களுக்கு இது சம்பந்தமான
விழிப்புர்ணர்வை ஏற்படுத்த
உதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்த
மாணவர்களுக்கு இதனை பற்றிய
விழிப்புர்ணர்வு அதிகம், அதன்
காரணமாகதான் கடந்த 5
வருடங்களுக்கு மேலாக முழுவதும்
வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்
மட்டுமே நம் மாநிலத்துக்கு உரிய
இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து
பலன் பெற்று வருகிறார்கள் .
இதனை தங்களால் முடிந்த அளவுக்கு
நண்பர்கள் மத்தியில் ஷேர் செய்யவும்
. ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய
விழிப்புர்ணர்வு தமிழக
மாணவர்களிடத்தில் ஏற்படுத்த
உதவுங்கள் .
- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்

1. Thiruvallur Collector 9444132000
044 27661600 27662233 27662299

2. Chennai 9445419966 9444131000
044 25381330 25383962 25228025 25234403 42112110 25228025

3. Kancheepuram Collector 9444134000
044 27237433 27238478 27238477

4. Vellore Collector 9444135000
0416 2252345 2252501 2222000 2253034 2228029

5. Krishnagiri Collector 9444162000
04343 239500 239400 239100 239300

6. Dharmapuri Collector 9444161000
04342 230500 232300 232800/ 230886

7. Tiruvannamalai Collector 9444137000
04175 233333 233366 232222

8. Villupuram Collector 9444138000
04146 222450 222480 222470

9. Namakkal Collector 9444163000
04286 281101 280111 280222 281106

10. Salem Collector 9444164000
0427 2452233 2452244 2400200 2400700 2452960

11, Erode Collector 9444167000
0424 2266700 2262444 2261444

12. .The Nilgiris Collector 9444166000
0423 2442344 2442233 2443971

13. Coimbatore Collector 9444168000
0422 2301320 2213230 2301523

14. Dindigul Collector 9444169000
0451 2461199 2432600 2432133/ 2467082

15. Karur Collector 9444173000
04324 257555 257112 255444 257800

16. Tiruchirapalli Collector 9444174000
0431 2415358 2420681 2420181 2411929

17 Perambalur Collector 9444175000
04328 276300 224200 277875

18. Ariyalur Collector
04329 223351 223331

19. Cuddalore Collector 9444139000
04142 230999 230651-55 230666/ 230777 230555

20 Nagapattinam Collector 9444176000
04365 252700 247800 247400 253048

21. Thiruvarur Collector 9444178000
04366 223344 225142 224738 221033

22. Thanjavur Collector 9444179000
04362 230121 230201 230857 230627

23. Pudukkottai Collector 9444181000
04322 21663/ 221624 221690 221690

24. Sivaganga Collector 9444182000
04575 241466 241455 241581 241581

25, Madurai Collector 9444171000
0452 2531110 2532290 2530925

26. Theni Collector 9444172000
04546 253676 253626 253626

27. Virudhunagar Collector 9444184000
04562 252525 252345 252500

28. Ramanathapuram Collector 9444183000
04567 231220 221349 230558

29. Thoothukudi Collector 9444186000
0461 2340600 2320050 2326747 2340606

30. Kanniyakumari Collector 9444188000
04652 279555 260666 260999 260999.

நண்பர்களே இதை ஷேர் மட்டும் செய்து விடாமல் ஒரு printout எடுத்து டைரியில் வைத்துக்கொள்வோம் ,