புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

30 August 2015

தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அனைத்து காலிப்பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை கலந்ததாய்வை புறக்கணிக்கிறது

தருமபுரி  மாவட்டத்தில் இன்று 24.08.15 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.  கலந்தாய்வு  தொடங்கியவுடன் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால்  தருமபுரி மாவட்டத்தில்பல்வேறு காலி பணி இடங்கள் மறைக்கப் பட்டிருக்கிறது   குறிப்பாக தருமபுரி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி கணிதபணி இடம், கடகத்தூர், லளிகம் போன்ற பள்ளிகளில் தமிழ் பாடங்கள், காரிமங்கலம் தாவரவியல் பாடங்கள் உள்ளிட்ட ஏராளமான  இடங்கள் மறைக்கப் பட்டுள்ளது.
இதை கண்டித்து தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்  அனைத்து பணி இடங்களையும் வெளிப்படையாக காண்பிக்கும்வரை  கலந்ததாய்வை  புறக்கணிக்கிறது.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கவேல், மாநில செய்தி தொடர்பாளர் செல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் அஜீஸ், மாவட்ட பொருளாளர் வையாபுரி,  மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், தலைமை இட செயலர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர்  ஆரோக்கியம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், ஏராளமான  ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர்  

                                     

                                        




















No comments: