புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

8 February 2015

08.02.15 அன்று தருமபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம்


தலைமை மாவட்டத் தலைவர் திரு . E.P. தங்கவேல் 
சிறப்பு விருந்தினர் திரு.ப.சக்திவேல், மாநில துணைத் தலைவர், கரூர்
தேர்வுப் பணியில் ஈடுபடுவோருக்கு உழைப்பூதியத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஈ.ப.தங்கவேல் தலைமை வகித்தார். செயலர் ஐ.அப்துல் ஜீஸ் முன்னிலை வகித்தார். தீர்மானங்கள் குறித்து மாநில துணைத் தலைவர் சக்திவேல் பேசினார்.
கடந்த 2003-04-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலத்தை பணியில் சேர்ந்த நாள் முதல் முறைப்படுத்த வேண்டும். 2009-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் ஊதிய நிர்ணயத்தை மாற்றம் செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும். திருச்சியில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, உழைப்பூதியம் உயர்த்தித் தரப்படாத நிலையில், வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள கருத்தியல் பணி புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
பொதுத் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் உழைப்பூதியத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டப் பொருளர் ச.வையாபுரி வரவேற்றார். செய்தித் தொடர்பாளர் ஆரோக்கியம்  நன்றி கூறினார்.
கூட்டத்தில்  கலந்து கொண்டவர்கள்  
தி.செல்வம்  மண்டல செயலர் அரூர் (ம)  
  J.அப்துல் அஜிஸ்,  மாவட்டச் செயலர், காளிப்பேட்டை 
  S.வையாபுரி,  மாவட்ட பொருளாளர், அரசு   மே.நி.ப.   B.அக்கரஹரம்
 K.அருண்குமார்,  மாவட்ட  அமைப்பு  செயலாளர்,  இலக்கியம்பட்டி(ஆ)
 M.முருகன் ,  மாவட்ட  தலைமையிட  செயலாளர்,  தருமபுரி (ஆ)
G.ஆரோக்கியம்,  மாவட்ட  செய்தி தொடர்பாளர் , ஆர்.கோபிநாதம்பட்டி
M .சிவசங்கர் ,  மாவட்ட பிரசாரச்  செயலர் ,  பென்னாகரம். (ம)     
G .ராஜா, மாவட்ட  தனிக்கையாளர் ,  பாளையம்புதூர்
கா .காவேரி, மாவட்டத் துணைத் தலைவர், அதியமான்கோட்டை(ஆ  M.ஜேம்ஸ் ராஜா, கல்வி  மாவட்டச் இணைச்செயலர், புலிகரை
கா.பாபு சுந்தரம் .மாநில செயற்குழு உறுப்பினர் ,பாலக்கோடு (ஆ)  க.சம்பத்குமார் ,  மாநில செயற்குழு உறுப்பினர், ஏலகிரி
 S.M.தௌத் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர்,பண்டஹள்ளி
 C.பச்சியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர், ஏலகிரி                                          
 சி.சதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர், G.T.R. வச்சாச்சி 
மு .சுரேஷ் , நகர தலைவர்,தருமபுரி நகரம், தருமபுரி (ம )
 K .பெரியசாமி  , நகர செயலர், தருமபுரி நகரம் , அளே தருமபுரி 
தங்ககுமார், பண்டஹல்லி, திருநாவுகரசு ,தொங்கநூர் , மா.வெள்ளிங்கிரி , மெனசி,, கதிரவன், பி.துறின்ஜிபட்டி,நந்திவர்மன், இண்டூர், கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி (ஆ), கா.சக்திவேல். ஒடசல்பட்டி, மு.சக்திவேல் ஒடசல்பட்டி ,பாலன் , அனுமந்தபுரம், காமராஜ் ,கிரிஷ்னாபுரம், ஜி .அண்ணாதுரை ,பாளையம்புதூர் , எம்.சக்திவேல், கடத்தூர் (ஆ) ,காசிநாதன்,  அரூர் (ம) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .




                                      
                                   
                                       
                                       



























































No comments: