புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

30 December 2015

தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக 2015ம் ஆண்டு நிகழ்வுகள் ஒரு சிறப்பு பார்வை




  
2.1.15 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி  முதுநிலை பட்டதாரி 
ஆசிரியர் கழக தருமபுரி மாவட்ட தலைவர் இ பி  தங்கவேல், 
மண்டல செயலர். ஆர்.செல்வம்,வையாபுரி,
 ஞானசிகாமணி,முருகன்,அருண்குமார்,  சேகர், தமிழ்வாணன் 
இராஜசேகர் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட நிர்வாகிகள் 
  முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி,
மாவட்ட கல்வி அலுவலர் திரு.நடராஜன்,மாவட்ட தொடக்ககல்வி   அலுவலர்(பொ ) திரு.பாலாஜி   மற்றும் 
RMSA COORDINATOR திரு.சுப்ரமணி ஆகியோரை சந்தித்து 
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்   


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டி கருப்பு பட்டை       அணிந்து ஆர்ப்பாட்டம்.                                                                                          தருமபுரி மாவட்டத் TNHSPGTA தலைவர்  திரு E.P.தங்கவேல் ,  மற்றும் பிற  ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள்  















தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்  மாநில தலைவராக திரு வே . மணிவாசகன் மீண்டும்  தேர்வு செய்யப்பட்டுள்ளார் .




மாநில பொறுப்பாளர்கள்,  இயக்குனர் மற்றும் இணை  இயக்குனர்களுடன்   சந்திப்பு 

மாநில தலைவர்,  வே.மணிவாசகன்,  
மாநில பொது செயலாளர்,  இரா.பிரபாகரன்,  மதுரை.
மாநில பொருளாளர், ஆ.கிருஷ்ணன்,  வந்தவாசி. 
மாநில அமைப்பு செயலாளர்,  இரா.புஸ்பராசு,  நாமக்கல்.
மாநில தலைமைஇட செயலாளர்,  பொ.பாலசுப்ரமணியன், சென்னை 
மாநில செய்தி தொடர்பாளர்,  ஆர்.செல்வம், தருமபுரி.
மாநில பிரசார செயலர்,  அ.க.வடிவேல்,  புதுகோட்டை.
மாநில மகளிர் அணி செயலாளர்,  திருமதி.கே.முத்துகுமாரி, தேனி.
மாநில சட்டத்துறை செயலாளர்,  இரா.சீனிவாசன்,  கிருஷ்னகிரி,



08.02.15 அன்று தருமபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக  மாவட்ட பொதுக்குழு  கூட்டம்   
தலைமை மாவட்டத் தலைவர் திரு . E.P. தங்கவேல் 
சிறப்பு விருந்தினர் திரு.ப.சக்திவேல், மாநில துணைத் தலைவர், கரூர்

ஜேக்டோ ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டம் 

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை 

பட்டதாரி ஆசிரியர் கழகம் 
               
சார்பில் 28 மாவட்டங்களில்  01.04.15 அன்று  கண்டன ஆர்பாட்டம்

மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் 

அறிக்கை 

1980 முதல் +2 அரசு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 1980-ல் 38 விழுக்காடாக   இருந்த தேர்ச்சி முடிவுகள் இன்று 90 விழுக்காட்டை   தொட்டு விட்டது. ஆனால் தேர்வுத் துறை ஏனோ தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் மேல் எடுக்க எத்தனிக்கின்றது. இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.தேர்வு நடக்கின்ற நடுவங்களுக்கு தற்போது இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ற பெயரில் வரும் பறக்கும் படைகள் மாணவர்களின் ஆடைக்குள் கையை விட்டு சோதனை செய்வதை வாடிக்கையாக செய்து வருகிறார்கள். மன அழுத்தங்களோடு தேர்வு எழுதும் மாணவனையோ அல்லது மாணவியையோ மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவது என்பது மனித உரிமை மீறிய செயலாகும். பள்ளி நேரங்களில் மாணவனை கடுஞ் சொற்கள் கொண்டு திட்டிவிட்டால் விசாரணை என்றும், ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை என, ஆட்டம் போடும் பள்ளிக் கல்வித் துறை, தேர்வு நேரங்களில் குழந்தைகளை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை,  எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் எதிர்காலம் காக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
           தேர்வு அறைகளில்  மாணவர்கள் துண்டு சீட்டு வைத்திருப்பதை பறக்கும் படை உறுப்பினர்கள்  கண்டு பிடித்தால்,  அறை கண்காணிப்பாளர்கள்மீது 
பணி  இடை நீக்கம் போன்ற அதிரடியான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை  எடுத்துள்ளது.    பள்ளிக்கல்வித்துறையின்  நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு வர அச்சப்படுவார்கள். ஆகவே பள்ளிக்கல்வித்துறையின்  செயல்பாடுகளை கண்டித்து, 28 மாவட்டங்களில், முதன்மைக்கல்வி  அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 1.04.15  அன்று  மாலை 5.00 மணி அளவில் கண்டன ஆர்பாட்டம் நடை பெறும் என்பதை   தெரிவித்து கொள்கிறேன்.
                                                                                              இப்படிக்கு 
                                                                                                      ( R.செல்வம்) 
                                                                               மாநில செய்தி தொடர்பாளர் 

                                     தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் 




தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தென்மாவட்ட கூட்டம் மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் சாத்தூரில் நடைபெற்றது (விருதுநகர் மாவட்டம்) 

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

மதுரை 

தேனி 

புதுகோட்டை 

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை 

பட்டதாரி ஆசிரியர் கழகம்  சார்பில் 

ஆர்ப்பாட்டம் 


மாநிலஅமைப்பு செயலாளர், புஸ்பராஜ்,    மாநில துணைத்தலைவர், சக்திவேல்,    நாமக்கல்மாவட்ட செயலர்  ராமு,   நீலகிரி மாவட்ட செயலர், பார்த்த சாரதி, திருப்பூர் மாவட்ட தலைவர், குணசேகரன்,    ஈரோடு மாவட்ட செயலர்,  திம்மராயன்,   கரூர் மாவட்ட மகளிரணி செயலர்,  உமா உள்ளிட்டோர் கோவை  மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக  சாதனைகளை  விளக்கி   துண்டறிக்கைகளை வழங்கினர்.




நீலகிரியில் 19.04.15 அன்று நடைபெற்ற ஜேக்டோ உண்ணா நிலை போராட்டம் 

19.04.15 இன்று சரியாக காலை 10.30 மணிக்கு வேலூர் மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர்.அதில் நமது அமைப்பை சேர்ந்த மாவட்ட தலைவர் திரு.கா.பாஸ்கரன் அவர்கள்  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.நமது அமைப்பின்   பெரும்பாலான முதுகலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.அவர்களுக்கு வேலூர் மாவட்ட தமிழ் நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.


19.04.0-15 கரூர் ஜேக்டோ விரதம் 
SALEM JACTO 19.4.15

25.04.15
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - மதுரை

 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரை - சிவகங்கை ரோடுஅரசனுர் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 25.04.2015  அன்று மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையிலும் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன்மாநிலப்  பொருளாளர் ஆ.கிருஷ்ணன்மாநில அமைப்புச் செயலாளர் இரா.புஷ்பராஜ்மாநில தலைமையிடச் செயலாளர் பொ.பாலசுப்பிரமணியன்மாநில மகளிர் அணிச் செயலாளர் க.முத்துக்குமாரி மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் சி.இரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் பெ.சரவணமுருகன் வரவேற்புரையாற்றினார் மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்.
தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் E.P.தங்கவேல் , மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலர் T.செல்வம் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
  • ஆறாவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கி நடுவண் அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்
  •    1987-ல் ஒப்பந்த நியமன முதுகலை ஆசிரியர்களையும் 2004-முதல் 2006-வரை  தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களையும் அவர்கள் பணியேற்ற நாள் முதல்  பணிவரன்முறை செய்ய வேண்டும்
  • தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்  முறையினை இரத்து செய்துபழைய ஓய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்
  •     வரும் கல்வி ஆண்டு முதல் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு நான்கு  பருவத் தேர்வு  நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
  •  12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளின் கடுமையைக் கருதி தேர்வுப் பணிகளுக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தினை பின்வருமாறு உயர்த்தித் தர வேண்டும்
  •     நலத்துறைப் பள்ளிகள் மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன்  இணைக்க வேண்டும்
  • கடந்த ஆண்டு அனைத்து இடங்களும் மறைக்கப்பட்டு பணியிட மாறுதல் நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் நடத்தப்பட வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.






5.5.15 தருமபுரி, கிருஷ்ணகிரி , வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கோடை  பயிற்சி 04.05.0-15 அன்று ஜவ்வாது  மலை,  ஜமூனாமரத்தூரில்  மாநில தலைவர் மணிவாசகன் தலைமையில்  நடைபெற்றது  






14.05.15 திண்டுக்கல் மாவட்டம் - பாராட்டு விழா, மாநில பொது செயலாளர் பிரபாகரன் பங்கேற்பு
பதவி உயர்வு , பணி நிறைவு, நல்லாசிரியர் விருது பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு திண்டுகல்மாவட்ட தலைவர் சலேத் ராஜா  தலைமையில் நடை பெற்றது . மாநில பொது செயலாளர் பிரபாகரன்,  மாநில துணைத் தலைவர் சக்திவேல்  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்


5.7.15
முதுகலை ஆசிரியர்களுக்ககான கலந்தாய்வை
விரைவில் நடத்திட,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக
மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் தமிழக அரசுக்கு கோரிக்கை
  
அனைத்து நிலை அரசுப்பள்ளி  ஆசிரியர்களுக்கான இடமாறுதல்  கலந்தாய்வு, மே மாதத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இதுவரை நடத்தப்படாமல் இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பல தலைமையாசிரியர் பணியிடங்களும் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது.  ஆகவே இந்த ஆண்டுக்கான கலந்தாய்வை நடத்தும் பொழுது, 2015-16ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளின் பெயர்களையும் அறிவித்து, அதற்கு தோற்றுவிக்கப்படும்  பணியிடங்களையும் கருத்தில் கொண்டு , காலி பணியிடங்களை முறையாக அறிவித்து, முதலில் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும்  முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் என்ற முறையில், ஒளிவுமறைவின்றி,  எவ்வித முறைகேடும் இல்லாத வகையில், முதுகலை ஆசிரியர்களுக்ககான கலந்தாய்வை விரைவில் நடத்திட, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. 



                                            இங்ஙனம்
                                       வே.மணிவாசகன்

                               
20.07.15 விழுப்புரம் விடைத்தாள்  திருத்தும் மையம்  மற்றும்  மாவட்ட பொறுப்பாளர்களுடன்   மாநில த  லைவர் மணிவாசகன்  சந்திப்பு  மற்றும் விழுப்புரம் மாவட்ட உறுப்பினர் சேர்ப்பு 


புதுகோட்டை மாவட்ட உறுப்பினர்களுடன்   மாநில பொது செயலாளர் திரு.பிரபாகரன் சந்திப்பு 

பெரம்பலூர்  மாவட்ட உறுப்பினர்களுடன்  மண்டல செயலாளர் திரு. கதிரேசன்  சந்திப்பு 

27.08.15 மாநில பொதுக்குழுக் கூட்டம்  -வேலூர் .   மாநில தலைவர் மணிவாசகன் பங்கேற்பு 






தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களுக்கு இலண்டன்,உலக தமிழ் செம்மொழி பல்கலைக்கழகத்தால்மதிப்புறு  முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. மாநில கழகத்தின் சார்பாக  சிதம்பரத்தில் நடைபெற்ற பாராட்டுவிழா 









29 December 2015

கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள்

1 . HOME SCHOOL MATHS.NET .
      தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று
கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல்முறைகள்,வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது;
2. MATHWAY.COM
    கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை
விளக்கத்துடன் தருகிறது இந்த தளம்.

23 December 2015

12th Bio - Zoology Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Bio - Botany Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Chemistry Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Physics Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Maths Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Geography Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Economics Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th History Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Commerce Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Accountancy Study Materials for slow Learners/English Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Zoology Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Botany Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Physics Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Chemistry Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Accountancy Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Commerce Study Materials for slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Economics Study Materials for slow Learners/ Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th History Study materials for slow learners/Tamil medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Geography Study Materials for Slow learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

12th Maths Study Materials for Slow Learners/Tamil Medium for Rain Affected dt. Chennai, Cuddalore etc

21 December 2015

தோல்வியின் அடையாளம் "தயக்கம்"  வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"...  துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!

தோல்வியின் அடையாளம் "தயக்கம்" 
வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"... 
துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!!!

* வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது, 
புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது

* அழும் போது தனியாக அழு..!! சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!!
ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.!தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.! 
புரிந்து கொள்ள முடியாத உலகம் நீயாவது புரிந்து கொள்.!!

* சொன்ன ஒரு சொல் / விடுபட்ட அம்பு / கடந்து போன வாழ்க்கை / நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது."

* வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும், 
உனக்குள் உள்ள உனது பலத்தை உனக்கு புரியவைக்கும் 
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்... 
நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசப்படனும்... 
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படனும்.

19 December 2015

மாவட்டக் கல்வி அலுவலர்கள் நம்மை கேள்வி கேட்பதோ நாம் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கவோ எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அவ்வாறு ஓரிருவர் அவ்வாறு நடக்க எத்தனித்தால் நீங்கள் வகுப்பை விட்டு வெளியே வந்து விடுங்கள்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA)மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன்  அவர்களின் செய்தி 
நமது மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

       பள்ளிக்கு வருகை தரும் அதிகாரிகளில் முதுகலை ஆசிரியர்களை பாடம் சம்மந்தமாக கேள்வி கேட்கும் உரிமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அவருக்கு மேல் உள்ள பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே கேள்வி கேட்க முடியும்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் நம்மை கேள்வி கேட்பதோ நாம் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கவோ எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. அவ்வாறு ஓரிருவர் அவ்வாறு நடக்க எத்தனித்தால் நீங்கள் வகுப்பை விட்டு வெளியே வந்து விடுங்கள்.
மாவட்டக் கல்வி அலுவலர் நேரடி நியமன முதுகலை ஆசிரியராக பணியாற்றி கூட பதவி உயர்வு பெற்றிருக்கலாம். அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. எந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கும் நம்மை கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. இதனை ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களும் அறிந்து கொண்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் தெளிவு படுத்த வேண்டும்.
நமக்கென்ன என இருப்பதற்கு பொறுப்புகள் தேவையில்லை. பொறுப்பு என்று எங்கு வந்தாலும் மன அழுத்தம் இருக்கும். இதனை ஏற்றுக் கொண்டு செயலாற்றும் போதுதான் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் வெற்றி பெற முடியும்.
தற்போது பணியேற்றிருக்கும் சில முதுகலை ஆசிரியர்களுக்கு தஙகள் பணிசார்ந்த நிகழ்வுகளில் உரிமையை விட்டுக் கொடுக்கிறார்களோ என்ற அச்சம் எனக்கு உள்ளது.
கட்செவியில் பல புரட்சிகரமான செய்திகளைக் கொண்டு வரும் நமது இளைய வரவுகள்,  அதிகாரிகள் என்றவுடன் நாம் 37 ஆண்களாக போராடிப் பெற்ற சுயமரியாதையை உரிமைகளை விட்டுக் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சமும் அவ்வப்போது நெஞ்சிலே ஊசலாடுகிறது.
சில மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட எது நடந்தால் என்ன என நினைப்பதை போன்று உணர்கிறேன். நம்மிலே சில ஆசிரியர்கள் நம்மை ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். அதிகார வர்க்கம் என்று வந்து விட்டால் கூனிக்குறுகி அடங்கி விடுவார்கள். இவ்வாறு உள்ளவர்கள் பாதிக்கப்படும் போது நாமே களத்தில் இறங்கி அவர்களையும் நமது பணித் தொகுதியின் சுயமரியாதையையும் பாதுகாக்க வேண்டும். ஏதோ இதனை விளையாட்டாக மாவட்டப் பொறுப்பாளர்கள் கருதக் கூடாது. முதுகலை ஆசிரியர்களின் பணித் தொகுதியின் சுயமரியாதையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களிடத்திலே உள்ளது என்பதனை நெஞ்சிலே நிறுத்துங்கள்

வே.மணிவாசகன்
மாநில தலைவர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA)

நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?

குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும்.
- ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர்

நீங்கள் குருவா? ஆசிரியரா...? என வினவிக் கொண்டபோது நமக்கு கிடைத்த விடை என்னவாக இருந்தது...? இன்னும் கொஞ்சம் தூர் வாரினால் அந்த அறிவுக்கேணி உங்கள் உண்மை முகத்தை தோண்டி எடுத்துக் கொடுத்துவிடும். கடந்த நம் அத்தியாயத்தை வாசித்து என்னிடம் கருத்து பரிமாறிய புதுவை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான ஒன்றை குறிப்பிட்டார். அவர் கூற்றுப்படி ஆசிரியர்கள் இரண்டு வகை. ஒருவர் ஆசிரியராகவே வாழ்பவர். மற்றவர் ஆசிரியர் வேலைக்குப் போய் வருபவர். இக்கூற்றை நான் பரிசீலித்தபோது வியப்பான முடிவுகளை அடைய முடிந்தது. ஆசிரியராகவே வாழ்பவர்தான் முன் உதாரண ஆசிரியர். இவர் மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்பவர். காலத்திற்கேற்ற மாறுதல்களை மனமுவந்து ஏற்பவர். இலட்சியத்தால் எழுச்சி காண்பவர்.

இவரது இலக்கு கல்வி மற்றும் கதறல் செயல்பாடு மட்டுமே அல்ல. மாணவர்களின் வாழ்வை மேம்படுத்துதல், அவர்களது சிந்தனைத்திறனை மேம்படுத்துதல். பாடப்புத்தகம் என்பது ஒருவகை வழிகாட்டி மட்டுமே. இவரைப் பொருத்தவரை கல்வி வகுப்பறையில் மட்டுமே நடப்பது அல்ல. குழந்தைகள் காலை கண் விழித்தெழுதல் முதல் இரவு உறங்கப்போகும் அந்த நிமிடம் வரை, பார்ப்பது, கேட்பது, அனுபவிப்பது எல்லாமே கல்வியில் அடக்கம். எந்த வயது மாணாக்கரை இவரிடம் ஒப்படைத்தாலும் முகம் கோணாது செயல்படுவார். தனது வாழ்வை, தனது ஆசிரியப் பணியிலிருந்து பிரித்துணர முடியாதவர் இவர். மாணவர் நலனை முன்வைத்து இயங்குபவர்.

ஆசிரியர் வேலைக்கு, கடனே என போய்வரும் ஒருவரை பரிசீலிப்போம். முதலில் அத்தகைய ஒருவருக்கு அப்பணி நிரந்தரமானதல்ல. அடுத்த படி நிலைகளை வாழ்வில் சாதித்து முன்னேற ஒரு தற்காலிக ஏற்பாடு இப்பணி. பெரும்பாலும் ஆசிரிய பணியாளரின் இலட்சியம், மாணவர் சார்ந்ததாக இருப்பது கிடையாது. ஏதோ ஒரு உபதொழிலை (Side Business) இவர் செய்கிறார். தனது வருமானத்தை குறிவைத்து திட்டமிட்டு  காய் நகர்த்துகிறார். இவருக்கு தன் வேலையில் கால அளவு முக்கியம். ஒரு மணி நேரம்கூட கூடுதலாக மாணவர்களுக்கு செலவு செய்ய மாட்டார். மாலை வகுப்பு நடத்தவோ, கல்வி உபசெயல்பாட்டுப் பணிகள் செய்யவோ இவருக்கு விருப்பமிருப்பதில்லை. ஆனால் ஊதியம் என வரும்போது எந்த சமரசமும் இவரிடம் செல்லாது.

நாள்முழுவதும் இவரது கைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். தனது பணி, பள்ளியின் முதல் மணியின்போது தொடங்கி மாலை கடைசி மணி அடித்தால் முடிந்தது என கருதுபவர்; அதிலும்  ஓய்வான பிரீயட்களில் வாய்ப்பு கிடைத்தால் எஸ்கேப் ஆகிவிடுவது இவரது வேலை இயல்புகளில் ஒன்று. தேர்வு விழுக்காடு என்பது அதிகாரிகளால் தன்மீது திணிக்கப்பட்ட சுமை என்று கருதி எரிந்து போகிறவர். அதற்காக மாணவர்களை சபித்துத் தள்ளுபவர். இவரைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் மட்டுமே நடக்கிறது. பாடப்புத்தகமே வேதம். இத்தகையவரிial, Helvetica, sans-serif; fontுமா? டியூஷன் சென்டர் நடத்துவது! தனது சொந்த நலனை முன்வைத்து இயங்குபவர் இவர்.

* ஒரு மாணவர் பள்ளிக்கு இரண்டு மூன்று நாட்கள் வரமுடியவில்லை என்றால் ஆசிரியராக வாழ்பவர், மாணவர் வீட்டிற்கேகூட சென்று, என்ன ஆயிற்று என அறிந்துகொள்ள தயங்கமாட்டார்.

* ஆனால் ஆசிரியப் பணியாளர் அப்படியல்ல. பள்ளிக்கு வந்தால் நடத்துவார். வராதவர்களுக்கு அவர் பொறுப்பல்ல. பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்தால், தான் பணி செய்ய தயார் என வீரவசனம் பேசுவார்.

* ஆசிரியராக வாழ்பவர் தனது வகுப்பில் உள்ள அனைவரைப் பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பார். மாணவர்களின் பெற்றோர்களோடும்  இணக்கமான உறவை பேணுவார். அக்கறை என்பதே அவரது அணுகுமுறை.

* ஆசிரியப் பணியாளர் தனது உபதொழில் (Side-Business) சார்ந்து, ஓரிருவரை (பெற்றோர்) பயன்படுத்த அறிந்து பின்தொடர்வார். ‘அதிகாரம்’ என்பதே இவரது அணுகுமுறை. ‘வருமானம்’ என்பதே அவரது இலக்கு.

* ஆசிரியராக வாழ்பவர், பள்ளி நேரம் கடந்தும் மாணவர்கள் என்ன மாதிரி தன் பொழுதை போக்குகிறார்கள் என அறிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு மாணவரிடமும் அவரது அன்றாட அணுகுமுறை மாறுபடும்.

* ஆசிரியப் பணியாளர் பாடப்பொருள் சார்ந்தவர். அதை முடிப்பதும் அது சார்ந்த ‘வேலை-முடித்தல்’ பற்றியே சிந்திப்பவர்.

* ஆசிரியராக வாழ்பவர், மாணவர்களின் நிலை சார்ந்து  ஒரு பாடத்தை பலமுறை பலவிதமாக எத்தனை முறை கேட்டாலும் எத்தனைபேர் கேட்டாலும் திரும்ப விவரிக்க தயங்க மாட்டார். அதை தனது பேறாக, பெருமையாக கருதுவார்.

* ஆசிரியப் பணியாளர் பாடத்தை ஒருமுறை நடத்தவே சம்பளம் என பகிரங்கமாக சொல்வார். மறுமுறை அதை நடத்த வேண்டி வந்தால் அதை மிகப் பெரிய பாரமாக கருதி குமைந்துகொண்டே இருப்பார். ‘வேண்டுமானால் வீட்டுக்கு வா... டியூஷனில் கவனி... அதற்கும் பீஸ் கொடு...’ என்பதே அவரது அணுகுமுறை.

* ஆசிரியராக வாழ்பவர் அடுத்த தலைமுறை தன்னை கண்காணிக்கிறது என்ற புரிதலுடனே எதையும் செய்பவர். தனது அன்றாட பழக்க வழக்கங்களைக்கூட குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்கிற தெளிவோடு தன் வாழ்வை சுய கட்டுப்பாடு எனும் தூய்மை நெறியில் செலுத்துபவர்.

* ஆசிரியப் பணியாளர், பணி நேரத்தில்கூட சுய கட்டுப்பாட்டை இழப்பதை நாம் பார்க்கலாம். மாலையில், இரவில் அவர் எங்கும் செல்வார், எதையும் செய்வார். பள்ளியில் வீட்டு வேலை வாங்குவது, கைபேசியில் படம் பார்ப்பது, போதை பாக்கு, புகைத்தல்.. இவற்றோடு மதுக்கடை மகராசனாகவும் இருப்பதை பார்க்கலாம். அதுபற்றி அவருக்கு எந்த கூச்சமும் கிடையாது.

* ஆசிரியராக வாழ்பவர் சபலங்களுக்கு இடம் தரமாட்டார். மாணவர் மற்றும் மாணவியரை அவர்கள் +2 படிக்கும் வயதினராக இருந்தாலும் குழந்தைகளாக அணுகத் தெரிந்தவர். இவரது வகுப்பறையை, ‘உலகிலேயே பாதுகாப்பான இடம்’ என்று மாணவர்கள் கருதுவார்கள்.

* ஆசிரியப் பணியாளர் தனது அதிகாரத்தின் மீதே கவனமாக இருப்பதால் விதி மீறல்களை கட்டுப்படுத்துவதில்லை. விதிகளை சரிவர அறிவதும் இல்லை. பால்ய வன்முறையிலிருந்து பாலியல் வன்முறை வரை சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப எதையும் செய்வார்கள். வகுப்பையே தனது மிரட்டலில் வைத்திருக்க இவர்கள் வெட்கப்படுவதே இல்லை. பொறுப்பற்ற இவர்கள் சபலங்களுக்கு பலியாகி இழைக்கும் வக்கிர குற்றங்களால் முழு ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைகுனிவே ஏற்படுகிறது.

* ஆசிரியராகவே வாழ்பவர், மாணவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என கருதுவார். மாணவர்கள் அளவுக்கு இறங்கிச்சென்று அன்பு, தோழமை, நட்பு என உறவை விரிவடையச் செய்வார். வாசிப்பை, கற்றலின் இனிமையை விதைப்பவர்.

* ஆசிரியப் பணியாளர், மாணவர்கள் தன்னைக் கண்டாலே நடுங்க வேண்டும் என கருதுவார். கற்றலைச் சித்திரவதையாக்கி விடுவார்.

* ஆசிரியராக வாழ்பவர், குழந்தைகள் நலப் போராளியாக இருப்பதை நாம் காணலாம். குழந்தைகளுக்கு  எதிராக நிகழ்த்தப்படும் எத்தகைய அநீதியையும், சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் தடுத்திட முழு மூச்சாக இறங்குபவர். குழந்தை திருமணங்கள், நரபலி, குழந்தையை வேலைக்கு அமர்த்துதல்் என இவரது கண்களில் இருந்து எதுவும் தப்பாது. தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத்தையும் இதுமாதிரி வேலைகளில் ஈடுபடச் செய்வார்.

* ஆசிரியப் பணியாளர், ‘நமக்கேன் வம்பு’ என எதையும் கண்டுகொள்ள மாட்டார். வாய்ப்புக் கிடைத்தால் அச்செயல்களில் தானும் இறங்குவார். ‘இவர் செய்யலையா... அவர் செய்யலையா’ என வறட்டு வாதம் பேசுதல்... இதன் குற்றச்சாட்டிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத் தலைவருக்கு நெருக்கடியும் தர தயங்க மாட்டார்.

* ஆசிரியராகவே வாழ்பவர்... குழந்தைகளுக்கு தான் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதன் மீது கவனம் கொள்வார்.

* ஆசிரியப் பணியாளர், தனக்கு எப்படி எல்லாம் இருந்தால் பிடிக்கும் என்று குழந்தைகளை மிரட்டி வைப்பார். இதில் வன்முறை இல்லா வகுப்பறை யாருடையது...?
நீங்கள் யார்? ஆசிரியராகவே வாழ்பவரா...? ஆசிரியப் பணியாளரா...?