புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

31 May 2015

2015-16ம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

ஊதிய முரண்பாடு, பதவி உயர்வு இடர்பாடுகள், தேர்வுக் கோரிக்கைகள், சுயமரியாதை பாதிப்புகள் என எண்ணில் அடங்கா மன அழுத்தத்தில் நமது பணிகள் மட்டும் தொய்வில்லாமல் தொடர உள்ளன.முதுகலை ஆசிரியர்களை அச்சுறுத்தி தேர்ச்சி விழுக்காட்டை காரணம் காட்டி வேலை வாங்கும் பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களின் பாதிப்புகளைப் பற்றி கவலைப் படுவதில்லை. நமது குறைகளில் இம்மி அளவு கூட சரிசெய்யப்படாமல் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்தக் கல்வி ஆண்டிலாவது நமது இடர்பாடுகள் களையப்படுமா? என்ற ஏக்கத்தில் உங்களோடு ஒருவனாக இருந்து உங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். அனைத்து முதுகலை ஆசிரியர்களும் வழக்கு நிதியை மனமுவந்து தாருங்கள். உங்களால் வழங்கப்படும் நிதி வழக்கிற்காக மட்டுமே பயன்படுத்துவோம். முதுகலை ஆசிரியர்களுக்காக பணி செய்யா விட்டாலும் நமது இயக்கத்தின் மூலம் எதுவும் நடந்து விடக் கூடாது என 1980 முதல் தொடர்ந்து கொண்டே உள்ளது.மடியும் போது மடிவோம் என்று வாழ்வை வீணாய்ப் போக்காமல், மடிவது நல்ல குறிக்கோட்காயின் மண்ணில் இறந்தும் பெற்று விடு என்பது போல், நமது இயக்கப் பயணம் தொய்வில்லாமல் தொடர அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்.

மணிவாசகன்
மாநில தலைவர்

No comments: