புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

12 May 2015

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளின் அபார சாதனை

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 12,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் 97 அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வெழுதினர். இதில் கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.அபிமன்னன் 1148 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் ஜாலிபுதூர் பள்ளி மாணவி தி.தீபிகா 1145 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும் ஏலகிரி பள்ளி மாணவர் பி.அருள் 1136 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

11 May 2015

அமெரிக்காவில் நடந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில்,செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், பிரபல'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வு

 இந்தியாவில், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள், இணையதளம் மூலம் கற்பிப்பதில் புதுமை புகுத்தியஆசிரியர்களின் படைப்புகளை அமெரிக்காவை சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் 'மைக்ரோசாப்ட்' ஆய்வு செய்தது.இதில் தேர்வான ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு, டில்லியில் நடந்தது.இந்த கருத்தரங்கில் பங்கேற்ற, செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர், திலிப், அமெரிக்காவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்றக தேர்வு செய்யப்பட்டார்.அதன்படி, திலிப்குமார் உள்ளிட்ட 13 இந்தியர்கள் மற்றும் 87 நாடுகளை சேர்ந்த, 300 பேர் அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

196 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 3 மாணவியர் 1,172 மதிப்பெண்

        பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், 196 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மூன்று மாணவியர், 1,172 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகள் பிரிவில், மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
          பிளஸ் 2 தேர்வில் தமிழகம் முழுவதும், 90.6 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளை விட, 6 சதவீதம் குறைவாக, 84.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித்துறை நேரடி கட்டுப்பாட்டில், 2,700 பள்ளிகள் உள்ளன. 3 லட்சத்து, 44 ஆயிரத்து, 189 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.

முக்கிய தினங்களின் விவரம்.

ஜனவரி
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

8 May 2015

திருமணம் ஆகியிருந்தாலும் மரணம் அடைந்த அரசு ஊழியரின் மகளுக்கு வேலை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

திருமணம் ஆகியிருந்தாலும் மரணமடைந்த அரசு ஊழியரின் மகளுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலையை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

6 May 2015

மறுகூட்டலுக்கு மே 8முதல் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

*வரும் 8ம் தேதி முதல், மே 14 வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.

*விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.

*விடைத்தாள் நகல் கேட்போர், அதே பாடத்துக்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும்.

*விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு தலா, 550 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 275 ரூபாய் கட்டணம்.

*மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்கு தலா, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் கட்டணம். இந்த கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, தேர்வர்கள் பத்திரமாக வைத்து இருக்க வேண்டும்; அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.

விடைத்தாள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி மற்றும் இணையதள முகவரி பின் வெளியிடப்படும். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கான, சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன் இறுதியில் நடக்கும். இதற்கு, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும், மே 15 முதல் 20ம் தேதி வரை, தங்கள் பெயரை பதிவு செய்யலாம். தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு, உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்; இதற்கு தனி விண்ணப்பம் கிடையாது.

பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாய் தேர்வுக் கட்டணம்; 35 ரூபாய் இதரக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் தவிர, பதிவுக் கட்ட ணமாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

3 May 2015

தருமபுரி பிரசார செயலாளர் சிவசங்கர் மற்றும் கிருஸ்ணகிரி மாவட்ட பத்தவச்சலம் ஆகிய பொறுப்பாளர்களுக்கு மாநில தலைவர் மணிவாசகன் அவர்களின் திருமண வாழ்த்து


திருமண வாழ்த்து 
தருமபுரி பிரசார செயலாளர்  சிவசங்கர் மற்றும் கிருஸ்ணகிரி மாவட்ட பத்தவச்சலம் ஆகிய பொறுப்பாளர்களுக்கு 
மாநில தலைவர் மணிவாசகன், பொது செயலாளர் பிரபாகரன், மாநில அமைப்பு செயலாளர் புஸ்பராஜ் ,   மாநில சட்ட செயலாளர் சீனிவாசன்,  மாநில துணை தலைவர்கள் சக்திவேல், சேகர்,  மதுரை ராஜேந்திரன், தருமபுரி மாவட்ட தலைவர்  மாவட்ட தலைவர், கிருஸ்ணகிரி மாவட்ட தலைவர், இலட்சுமணன் ,  மண்டல செயலர் தி.செல்வம், மாவட்ட செயலர் அப்துல் அஜிஸ் , மாவட்ட பொருளாளர் வையாபுரி, மகளிரணி செயலாளர் ஞானசிகாமணி   உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள்  திருமண வாழ்த்து  தெரிவித்தனர் 



புதுமனை புகு விழா கொண்டாடிய மாநில செய்தி தொடர்பாளர் செல்வம் அவர்களின் குடும்பத்தாருக்கு மாநில தலைவர் வாழ்த்து

புதுமனை புகு விழா கொண்டாடிய  மாநில செய்தி தொடர்பாளர் செல்வம் அவர்களின் குடும்பத்தாருக்கு  மாநில தலைவர் மணிவாசகன், பொது செயலாளர் பிரபாகரன், மாநில அமைப்பு செயலாளர் புஸ்பராஜ் ,   மாநில சட்ட செயலாளர் சீனிவாசன்,  மாநில துணை தலைவர்கள் சக்திவேல், சேகர்,  மதுரை ராஜேந்திரன், தருமபுரி மாவட்ட தலைவர் E.P.தங்கவேல்,  கிருஸ்ணகிரி மாவட்ட தலைவர், இலட்சுமணன் ,  மண்டல செயலர் தி.செல்வம், மாவட்ட செயலர் அப்துல் அஜிஸ் , மாவட்ட பொருளாளர் வையாபுரி, மகளிரணி செயலாளர் ஞானசிகாமணி   உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள்  வாழ்த்து தெரிவித்தனர் .



30 April 2015

3 முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.


முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரி பொன்னையா பதவி உயர்வு பெற்று இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் உஷாராணி அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.

அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் குப்புசாமி மாற்றப்பட்டு அரசு தேர்வுகள் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிச்சாரா வயது வந்தோர் கல்வி இயக்க இணை இயக்குனர் சுகன்யா நூலக இணை இயக்குனர் கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார்.

இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Pay order for the month of apr-2015

29 April 2015

மேல்நிலைத் தேர்வு மார்ச் 2015 -செய்முறை தேர்வு தேர்வு நடத்துதல்- அகம்/புற தேர்வர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசுதல்/கேட்டல் , அலுவலக பணியாளர்களுக்கு உழைப்புதியம் முன் பணம் அனுமதிப்பு - இயக்குனர் செயல் முறைகள்


 மேல்நிலைத் தேர்வு மார்ச் 2015 -செய்முறை தேர்வு தேர்வு நடத்துதல்-
அகம்/புற தேர்வர்கள்,  தமிழ் மற்றும் ஆங்கிலம்  பேசுதல்/கேட்டல் , அலுவலக பணியாளர்களுக்கு உழைப்புதியம் முன் பணம் அனுமதிப்பு - இயக்குனர்  ஆணை

2011-12 Upgraded Schools Pay continuation Order upto 1.12.2015

26 April 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையில் மதுரையில் 25.04.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - மதுரை

 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரை - சிவகங்கை ரோடு, அரசனுர் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 25.04.2015  அன்று மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையிலும் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன், மாநிலப்  பொருளாளர் ஆ.கிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் இரா.புஷ்பராஜ், மாநில தலைமையிடச் செயலாளர் பொ.பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணிச் செயலாளர் க.முத்துக்குமாரி மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் சி.இரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் பெ.சரவணமுருகன் வரவேற்புரையாற்றினார் மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்.
தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் E.P.தங்கவேல் , மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலர் T.செல்வம் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
  • ஆறாவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கி நடுவண் அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்
  •    1987-ல் ஒப்பந்த நியமன முதுகலை ஆசிரியர்களையும் 2004-முதல் 2006-வரை  தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களையும் அவர்கள் பணியேற்ற நாள் முதல்  பணிவரன்முறை செய்ய வேண்டும்
  • தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்  முறையினை இரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்
  •     வரும் கல்வி ஆண்டு முதல் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு நான்கு  பருவத் தேர்வு  நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
  •  12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளின் கடுமையைக் கருதி தேர்வுப் பணிகளுக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தினை பின்வருமாறு உயர்த்தித் தர வேண்டும்
  •     நலத்துறைப் பள்ளிகள் மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன்  இணைக்க வேண்டும்
  • கடந்த ஆண்டு அனைத்து இடங்களும் மறைக்கப்பட்டு பணியிட மாறுதல் நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் நடத்தப்பட வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.



23 April 2015

இன்று உலக புத்தக தினம்

பாரீஸ் நகரில் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 25 முதல் நவம்பர் 16-ந்தேதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ‘‘அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

16 April 2015

தோலையே கரும்பலகையாக பயன்படுத்தும் அதிசய ஆசிரியர்:

பாடம் படிக்க வரிசையில் நிற்கும் மாணவர்கள் பிரித்தானியாவில் பேராசிரியர் ஒருவர் தனது உடலின் தோலையே கரும்பலகையாக பயன்படுத்தி பாடம் எடுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது பாடம் தொடர்பான விளக்கங்களை எழுத்து வடிவில் கற்பிக்க வெள்ளை அல்லது கரும்பலகைகளை ஆசிரியர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் பிரித்தானியாவில் உள்ள East Anglia பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி வரும் Zoe Waller(31) என்பவர் இதில் சற்று வித்தியாசமானவர். மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கு வெள்ளை அல்லது கரும்பலகை என எதையும் பயன்படுத்தாமல், தனது கையில் உள்ள தோலையே கரும்பலகையாக பயன்படுத்தி வருகிறார். வெள்ளை பலகையில் என்ன வரைய வேண்டுமோ அதை, ஒரு பென்சில் எடுத்து தனது கை தோலை கீறி படமாக வரைந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். பென்சில் அல்லது பிற கூர்மையான குச்சியை எடுத்து கை தோலில் கீறும்போது, அதே வடிவில் தோலில் வீக்கம் ஏற்பட்டு அது ஒரு வரைபடமாக மாறுகிறது. பேராசிரியர் எந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கிறாரோ அந்த அளவிற்கு அவரது தோலும் ஈடுகொடுத்து செயல்படுகிறது. இந்த செயலால் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பதற்கு ஒரே காரணம் அவருக்கு urticaria(அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதி) என்ற வியாதி உள்ளது. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டால், அவரது எந்த உறுப்பில் உள்ள தோல் மீது கீறினாலும் தடிப்புகள் ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே மறைந்து விடும். இது பற்றி பேராசிரியர் Zoe Waller கூறுகையில், இந்த அபூர்வமான அம்சம் எனது தோலில் இருப்பது எனக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவதுடன், அவ்வாறு செய்யும்போது சிறிதளவு வலியும் ஏற்படாது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தில் வித்தியாசமான முறையில் பாடம் எடுப்பதால், இவரிடம் பாடம் பயில அதே துறையை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14 April 2015

கோவை மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக சாதனைகளை விளக்கி வழங்கப்பட்ட துண்டறிக்கை.

                                     
மாநிலஅமைப்பு செயலாளர், புஸ்பராஜ்,    மாநில துணைத்தலைவர், சக்திவேல்,    நாமக்கல்மாவட்ட செயலர்  ராமு,   நீலகிரி மாவட்ட செயலர், பார்த்த சாரதி, திருப்பூர் மாவட்ட தலைவர், குணசேகரன்,    ஈரோடு மாவட்ட செயலர்,  திம்மராயன்,   கரூர் மாவட்ட மகளிரணி செயலர்,  உமா உள்ளிட்டோர் கோவை  மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக  சாதனைகளை  விளக்கி   துண்டறிக்கைகளை வழங்கினர்.

                                     

2 April 2015

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்பாட்டம்

அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிட கோரி 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை 

பட்டதாரி ஆசிரியர் கழகம்  சார்பில் 

ஆர்ப்பாட்டம் 






மாவட்ட   தலைவர்   E.P. தங்கவேல், தலைமையில் ஆர்பாட்டம்  நடைபெற்றது. தலைமையாசிரியர் கழக பொருளர் பொன்முடி உட்பட பலர் கலந்து கொண்டனர் .


 கலந்து  கொண்ட  மாநில பொறுப்பாளர்கள்
 R. செல்வம்மாநில செய்தி தொடர்பாளர்S. சேகர்மாநில துணைத்தலைவர் ,  T. செல்வம்மண்டல செயலர்   மற்றும் கலந்து  கொண்ட   மாவட்ட பொறுப்பாளர்கள்  J. அப்துல் அஜிஸ்,  மாவட்டச் செயலர், S. வையாபுரிமாவட்ட பொருளாளர் K.அருண்குமார்மாவட்ட  அமைப்பு  செயலாளர்S.ஞானசிகாமணி,மாவட்ட மகளிரணிசெயலாளர்
 M. முருகன்மாவட்ட  தலைமையிட  செயலாளர் G.ஆரோக்கியம்
மாவட்ட  செய்தி தொடர்பாளர், M .சிவசங்கர் ,  மாவட்ட பிரசாரச்  செயலர் ,  G .ராஜாமாவட்ட  தணிக்கையாளர் , மா.சிவராமகிருஷ்ணன்,மாவட்டத் துணைத் தலைவர .காவேரிமாவட்டத் துணைத் தலைவர் P.வினோத்மாவட்ட இணைச்செயலர்