புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

21 January 2015

19 January 2015

மாணவர்களின் வளர்ச்சிக்காக ஆசிரியர்களின் உத்திகளை பகிர்ந்து கொள்ள அழைப்பு

        தர்மபுரி மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்களின் புதுமை படைத்தல்களை இணையதளத்தில் வெளியிட வாய்ப்பு அளித்துள்ளதாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலகம் தெரிவித்துள்ளது.
     

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு.

புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

17 January 2015

மாற்றம் ஒன்றே மாறாதது

       பழைய திரைப்படங்களில் ஆசிரியர் என்றால் ஒரு குறிப்பிட்ட வகை உடைகளை அணிந்திருப்பார். பஞ்சகச்ச வேட்டி, தலையில் உருமால் அல்லது குடுமி, கையில் ஒரு கருப்பு குடை. இதை பார்த்தால் அவர் ஆசிரியர் என்று சொல்லி விடலாம். 80களில் வந்த திரைப்படங்களில் ஆசிரியை என்றால், ஒல்லியான, கொண்டை வைத்த, கையில் கலர் குடையுடன் இருப்பார். இப்படித்தான் ஆசிரிய, ஆசிரியைகள் திரைப்படத்தில் உருவகப்படுத்தப்பட்டனர். தற்போதுள்ள ஆசிரியர்களின் உடைகள் மேற்காண் திரைப்படங்களில் உருவகப்படுத்தப்படுவது போல உள்ளதா என்றால் இல்லை என்பதே நமது அனைவரின் பதிலும். மேலும் விரிவாக படிக்க கிளிக் செய்யவும் 

காந்திகிராம கிராமிய பல்கலை: 100 ஆண்டுகள் கிழியாத சான்றிதழ் அறிமுகம்.

     காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழாவின்போது, 100 ஆண்டுகளுக்கு கிழியாத பட்டச் சான்றிதழ்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, துணைவேந்தர் சு. நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

14 January 2015

அரசு பள்ளிகளில் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

     பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மாணவ மாணவியர் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள நேரமாக இது உள்ளது. 

10 January 2015

மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தரம் பிரிக்கும் பள்ளிக்கல்வித் துறை: பெற்றோர், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

              அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பள்ளி மாணவர்களை தரம் பிரித்து அணுகுமாறு, தலைமையாசிரியர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயாராக்குவது பற்றி பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை, புதன்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தனது அனுபவங் களை அடிப்படையாகக் கொண்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில் அரையாண்டு தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் முதல்நிலை மாணவர்கள், இடை நிலை மாணவர்கள், கடைநிலை மாணவர்கள் என 3 நிலைகளாக பிரிக்க அறிவுறுத்தியுள்ளார்.

படி... படி... என்பது படிப்படியாக முன்னேறுவதற்குத் தான்...

   படி... படி... என்று கூறுவது, படிப்படியாக முன்னேறுவதற்குத் தான்,” என, சந்திராயன் திட்ட இயக்குனர், மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

9 January 2015

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு "கவுன்சிலிங்' : பள்ளிகள் தோறும் மாணவர்களை சந்திக்க திட்டம்

அரசு பள்ளிகளில், 9 முதல், 12ம் வகுப்பு வரை, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளி கல்வித் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உளவியல் நிபுணர்கள் மூலம், "மொபைல் கவுன்சிலிங்' வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

8 January 2015

மாணவர்களுக்கு பயனுள்ள சில முக்கிய இணைய தளங்கள்

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.

பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை அலுவலர் /கூ.துறை அலுவலர் பொறுப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, தருமபுரி மாவட்டத்தலைவர் திரு.E.P.தங்கவேல் அவர்கள்,   PG TRB தேர்வு-ஆயத்த கூட்டதிற்கு வருகை புரிந்த  பள்ளிக்கல்வி இயக்குனர் மாண்பமை.கண்ணப்பன் அவர்களை சந்தித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை அலுவலர் /கூ.துறை அலுவலர் பொறுப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்  

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, தருமபுரி மாவட்டத்தலைவர் திரு.E.P.தங்கவேல் மாவட்ட செயலர் திரு அப்துல்  அஜிஸ்  அவர்கள் மாவட்ட ஆட்சியர்  திரு .விவேகானந்தன் மற்றும்  பள்ளிக்கல்வி இயக்குனர் மாண்பமை.கண்ணப்பன் அவர்களுக்கு சிறப்பு செய்தல்.

மாவட்டத்தலைவர் மற்றும் மண்ல   செயலர் திரு செல்வம் இயக்குனருக்கு நினைவு பரிசு அளித்தல் 




6 January 2015

தமிழ்நாடு மேல் நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செய்திகள் (TNHSPGTA DHARMAPURI DT NEWS)


விடைத்தாள் திருத்தும் வாயற் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்  தலைவர் திரு E.P.தங்கவேல் அவர்கள்,  மாநில அமைப்பு செயலர் திரு.பிரபாகரன் அவர்களை சிறப்பித்தல்  




விடைத்தாள் திருத்தும் வாயற் கூட்டத்தில் நமது அமைப்பின் மாநில பொதுக்குழுஉறுப்பினர் திரு.சிங்காரவேலன் உரையாற்றுதல், மண்டல செயலர் திரு. செல்வம் , மாவட்டத் செயலர் அப்துல் அஜீஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.சேகர், கல்வி மாவட்டத்  தலைவர்  திரு காவேரி , மாவட்ட செய்தி தொடர்பாளர்  திரு முருகன் உள்ளிட்டோர்    

                
        அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டி கருப்பு பட்டை       அணிந்து ஆர்ப்பாட்டம்.                                                                                          தருமபுரி மாவட்டத் TNHSPGTA தலைவர்  திரு E.P.தங்கவேல் , மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழக மாநில பொருளாளர் திரு.பொன்முடி,  மற்றும் பிற  ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள்  

4 January 2015

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடைப்பதில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
ஆண்டு ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி  முதுநிலை பட்டதாரி 
ஆசிரியர் கழக தருமபுரி மாவட்ட தலைவர் இ பி  தங்கவேல், 
மண்டல செயலர். ஆர்.செல்வம்,வையாபுரி,
 ஞானசிகாமணி,முருகன்,அருண்குமார்,  சேகர், தமிழ்வாணன் 
இராஜசேகர் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட நிர்வாகிகள் 
  முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி,
மாவட்ட கல்வி அலுவலர் திரு.நடராஜன்,மாவட்ட தொடக்ககல்வி   அலுவலர்(பொ ) திரு.பாலாஜி   மற்றும் 
RMSA COORDINATOR திரு.சுப்ரமணி ஆகியோரை சந்தித்து 
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்   

1 January 2015

உங்கள் குழந்தையிடம் சிறந்த நண்பனாக இருக்க கற்று கொள்ளுங்கள்

          நல்ல பெற்றோராக விளங்குவதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா? குழந்தை வளர்ப்பு பற்றி டிப்ஸ் உள்ளதா? சில டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளை நன்கு அறிய உங்கள் விவேகத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சரி, உங்கள் குழந்தையிடம் எப்படி நண்பனாக இருப்பது என்பதைப் பற்றி பார்க்கலாமா?

30 December 2014

12th Physics book back one word questions

12ம் வகுப்பு விலங்கியல் தமிழ் வழி minimum study material

பள்ளி மாணவர்களுக்காக தேசிய அளவில் இணைய அறிவுக்களஞ்சியம்

பள்ளி மாணவர்களுக்காக   தேசிய அளவில் இணைய  அறிவுக்களஞ்சியம் மத்திய  அரசு தொடங்கி உள்ளது. மாணவர்கள்  தங்களுக்கு தேவையான தகவல்களை www.nroer.gov.in  என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

 

28 December 2014

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! மாற்றுக் கல்விக்கான விதை

         தமிழகத்தில் கல்வி பற்றி விவாதங் களும் கருத்தாடல்களும் சமீப காலங்களில் கூடுதலாய் நடைபெற தொடங்கியிருக்கின்றன. இது நல்ல தொடக்கமே. அத்தகைய முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நூல் ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’. 34 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அரை நூற்றாண்டு காலமாகத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடைய படைப்பாளியாகவும் அறியப்பட்ட கவிஞர் நா.                  முத்துநிலவனின் கல்விச் சிந்தனைகளின் தொகுப்பு இது.
நேற்றைய - இன்றைய கல்வி நிலை, கல்வி முறைகள், கற்றல், கற்பித் தல் செயல்பாடுகள், அவற்றினால் நிகழ்ந்துள்ள சமூகத் தாக்கங்கள் என நூலிலுள்ள 19 கட்டுரைகளும் சுய சிந்தனைகளோடு நம்மிடம் கலந்துரை யாடுகின்றன. சமச்சீர்க் கல்வி, நல்லா சிரியர் விருது, கோடை விடுமுறை, தனியார்ப் பள்ளிகள், பாட நூல்களில் தமிழ், தமிழ்வழிக் கல்வி, பாடத்திட்டத்தில் ஊடகம் என ஒவ்வொரு கட்டுரையும் எளிமையாகவும் தெளிவாகவும் பலப்பல கேள்விகளை வாசகனுக்குள் எழுப்பு கின்றன. கல்வியாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள் என சகலரும் வாசிக்க வேண்டிய மாற்றுக்கல்விக்கான சிந்தனை விதைப்பே இந்நூல்.
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! 
நா.முத்துநிலவன் 
வெளியீடு : அகரம்,மனை எண்: 1, நிர்மலா நகர், 
தஞ்சாவூர் 613 007. தொடர்புக்கு: 04362 239289 
முதல் பதிப்பு: ஆகஸ்ட் - 2014 
பக்கம்: 156 | விலை: ரூ.120/- 
தொடர்புக்கு: 04362 239289

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம்: ராமதாஸ் கோரிக்கை

       மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

10 std Result Analaysis Excel model

IT Calculation for the year 2015