புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

19 February 2023

19-02-2023 கடலூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நமது மாநிலத் தலைவர் முனைவர் திரு மணிவாசகனார் அவர்களின் அன்புத் தாய் சேதுமணி வேணுகோபால் அவர்களின் 91 வது பிறந்த நாள் விழாவில் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய பெண் குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூபாய் 2000 வழங்கும் விழா நிகழ்வுகள்

19-02-2023 கடலூரில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் நமது மாநிலத் தலைவர் முனைவர் திரு மணிவாசகனார் அவர்களின் அன்புத் தாய் சேதுமணி வேணுகோபால் அவர்களின் 91 வதுபிறந்த நாள் விழாவில் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய பெண் குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூபாய் 2000 வழங்கும் விழா நிகழ்வுகள்.
அம்மாவின் ஆயுள் நீடித்து அவரின்  கொடைத் தன்மை வளரட்டும்.




இரவு நேரத்தில் சிறப்பு வகுப்பு எடுக்கச் சொல்லும் சேலம் மாவட்ட கல்வித்துறையை கண்டித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சேலம் மாவட்ட தலைவர் திரு பாரி தலைமையில் 18.02.23ல் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சேலம் மாவட்ட தலைவர் திரு பாரி தலைமையில் 18.02.23ல் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் 

15 February 2023

2022-23 பொது தேர்விற்கான தேர்வுப் பணிகள் குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை  தர்மபுரி மாவட்ட தலைவர் திரு.அருண்குமார் தலைமையிலான பொறுப்பாளர்கள் சந்தித்து 202-23 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வு பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்

அந்த மனுவில் நடைபெற உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில்,  வினாத்தாள் கட்டுக்காப்பாளர் முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர் வழித்தட அலுவலர் மற்றும் பறக்கும் படை உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும்

ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு பணியானது,  இருப்பிட முகவரியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு உட்பட்டதாக அமைய வேண்டும்

இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல் நலம் குன்றியோர், மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு  தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்று இருந்தது.

31 July 2022

இதயம் என்ன இரும்பா?மாணவர்களுக்கு கற்பிப்பதா? இல்லைதப்பிப்பதா?. ஒரு அலசல் கட்டுரை

https://drive.google.com/file/d/1oqkp20UtygIJaVIBmCGeITjOeHmwR__S/view
ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா?
மாணவர்களுக்கு கற்பிப்பதா? இல்லை
தப்பிப்பதா?. ஒரு அலசல் கட்டுரை

26 May 2021

மாநிலத் தலைவர் திரு வே மணிவாசகன் அவர்களின் பேட்டி

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் திரு வே மணிவாசகன் அவர்களின் பேட்டி 
https://www.dropbox.com/s/2do6tjyj3h2lhpv/VID-20210526-WA0025.mp4?dl=0

19 December 2017

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம். பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

👏Sooooooper High Court👏
Read on......

*V V V Important for all of us*

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம்.
பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984.
ஆனால், நடைமுறை அப்படியா இருக்கிறது?
இல்லவே இல்லை!
நிலத்தைப் பதிவு செய்துவிட்டு, 'பட்டா பெயர் மாறுதலுக்காக' வி.ஏ.ஓ., -விடம் போகிறோம்.
அவர் குறைந்த பட்சம் 4000 ரூபாயில் தொடங்கி நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
வெறும் பட்டா பெயர் மாறுதலுக்கோ, உட்பிரிவு உள்பட பெயர் மாறுதலுக்கோ 'சல்லிக்காசு' கூட கட்டணமில்லை. ஆனால் அவரோ, தாசில்தார், மண்டல துணை தாசில்தார் உள்பட, வருவாய்த் துறையின் அத்தனை மேஜைகளுக்கும் படியளந்துதான் பட்டா பெற முடியும் என்பதாக நம்மிடம் 'அளந்து', நம்மிடம் எதிர்பார்க்கும் தொகைக்கான 'பங்குத் தொகைப் பிரிப்புப் பட்டியலை' விரிக்கிறார்.
இந்தக் கொள்ளையை எதிர்த்து,  சமூக ஆர்வலர் திரு ஓ.பரமசிவம் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி திரு. சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர், தமிழக அரசின் 1984-ஆம் ஆண்டு அரசாணையின்படி எவ்விதக் கட்டணமுமின்றி உடனடியாகப் பட்டா பெயர் மாறுதல் செய்து வழங்கிட ஆணையிட்டுள்ளனர்.
மேலும், "நிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் பெறப்படுவதால், பதிவு செய்த ஒரு மாத காலத்துக்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து உரியவருக்கு வழங்கப்பட வேண்டும்; புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!" என்றும் அத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளனர்.

இதோ நண்பர்களே, அந்தத் தீர்ப்பின் நகல் கிடைத்துவிட்டது!

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CBwQFjAA&url=http%3A%2F%2Findiankanoon.org%2Fdoc%2F102996905%2F&ei=hi6dVYOlL4K4uATehKKgDA&usg=AFQjCNGHQb5xxpWfQJ4g8RRdl3TO6_sR5Q

தாசில்தார் தொடங்கி, வி.ஏ.ஒ வரை அடிக்கும் பகற்கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைப்போம்!
எல்லோருக்கும் போய்ச் சேருமளவு இத் தகவலைப் பரப்புங்கள்!🙏