💐தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாமக்கல் மாவட்டம் சார்பாக 07.1.15 நேற்று நமது மாவட்டப் பொறுப்பாளர்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களைச் சந்தித்தோம். நமது முதுகலை ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஐயா அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டு,கருத்துகளும் நெடுநேரம் தெரிவிக்கப்பட்டது.
தம்மால் இயன்ற அளவு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.💐நன்றி 💐
10 January 2016
நாமக்கல் மாவட்டம் சார்பாக 07.1.15 நேற்று நமது மாவட்டப் பொறுப்பாளர்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களைச சந்திப்பு
அனைத்துவகை ஆசிரிய நண்பர்களே! ! ஒரு ஆசிரிய தொழிற்சங்க அடிப்படை ஊழியனாக எனது சில கருத்துக்கள்!!
அனைத்துவகை ஆசிரிய நண்பர்களே! !
ஒரு ஆசிரிய தொழிற்சங்க அடிப்படை ஊழியனாக எனது சில கருத்துக்கள்!!
எந்த சங்கமாக இருந்தாலும் அச் சங்க நிர்வாகிகள் பெரும்பான்மையினர் போற்றுதலுக்குரியவர்கள் .தங்களின் பணியோடு பிற ஆசிரியர்களுக்காக நேரத்தையும் உழைப்பையும் செலவிடுபவர்கள்.அதிலும் சிலர் குடும்பத்தைக்கூட கவனிக்காமல் சங்கத்துக்காக விடிய விடிய பயணங்களிலும்,தபால் அனுப்புவது,கூட்டங்களுக்கு ஒருங்கிணைப்பது என கடும் பணியில் உணவைக்கூட மறந்து மூழ்கிப் போவார்கள்.
ஆனால் அவர்களின் அருமை,முக்கியத்துவம் தெரியாது ஆசிரியர்கள் அனைத்து வகையிலுமே இருக்கின்றார்கள்.குறிப்பாக உயர்நிலை மேல்நிலையில் அதிகம்.
பள்ளிக்கே சென்று உறுப்பினர் சந்தா கேட்போம்.சங்க வித்தியாசம் இல்லாமல் புதியதாக உறுப்பினராக சேர வலியுறுத்துவோ.எதிராக வரும் கருத்துக்களையும் கூர்மையாக உள்வாங்கிக் கொள்வோம்.போட்டியாளர்களைப் பற்றி விமர்சனம் செய்வோம்.தனிநபர் விமர்சனம் தவிர்த்து கொள்கை அடிப்படையை பேசுவோம்.வெகு சிலர் அங்கே பேயறைந்தது போல் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து கேட்பது போல் பாவனை செய்வார்கள்.சிலர் பணம் மொய் எழுத வந்திட்டான்கள் என்ற மனநிலையோடு இருப்பார்கள்.சிலர் பார்த்ததும்எங்கோ ஒளிந்து கொள்வார்கள்.மிக முக்கியமாக கடைசி நேரம் போல நோட்டு திருத்துவார்கள்.மாணவனுக்கு அன்றுதான் வெகு சிரத்தையாக பாடம் நடத்துவார்கள்.சிலர் மதிய உணவு இடைவேளையில் சிறுடப்பா உணவை 1 மணிநேரம் கூட மெதுவாக நன்கு மென்று சுவைத்து ரசித்து உண்பார்கள்.சிலர் சங்கத்துக்காரர்கள் ஏதோ தங்களின் மிகசிறிய பிரச்சனையை பெரிய பிரச்சனையாககருதவில்லை என்பார்கள்.
மகளிரில் சிலர் தங்களின் கணவனின் மேல் பழியைப் போட்டு கேட்டுபேசி பிறகு சங்கத்தில் இணைவதாக சொல்வார்கள்.இது போல சக மானிடப் பிறவிகளின் மனநிலையை,உளவியலைக் கற்று வர எனக்கு சங்கம் வாய்ப்பளித்ததை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.
ஆம் 50000ரூ மாத சம்பளம் வாங்கும் நாங்கள் பள்ளி பள்ளியாக ஆசிரியர்களை தேடி பணம் பெறவேண்டிய அவசியம் என்ன?எதற்காக அவர்களிடம் சிறு தொகையான 200 ரூ மற்றும் புத்தகத்திற்கு 100ரூ பெற மணிக்கணக்கில் பேசுகிறோம்.?
எங்களூக்கு அதிலென்ன ஆதாயம்?
பதில் இருக்கிறது.
எப்போதும் தன்னுடைய பங்களிப்பு இல்லாமல் ஒரு நிகழ்வு நடந்தால் அதில் ஆர்வமோ,அக்கறையோ,ஈடுபாடோ,இருக்காது.இது அடிப்படை மானிட உளவியல் கருத்து.தான் கொடுக்கும் சிறு தொகை பெரிய கவனத்தை ஈர்த்திட செய்யும்.அனைவரையும் ஒருங்கிணைத்து பொது எதிரிக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது இயற்கையின் கொள்கை.
பாருங்கள் வனங்களில் காட்டெருமைகள் ஒன்றாக சேரும் போது சிங்கம் தோற்றோடும்.அரசு அதிகாரம் ஊழியர் ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஆயுதம்.மிக எளிதாக 17A அல்லது 17B போன்ற நடவடிக்கை எடுத்து முடக்கி விடலாம் ஒரு தனிநபர்களை.
ஊழியர் ஒற்றுமையை குலைப்பது என்பது அரசியல்.ஒற்றுமையில்லாத கூட்டம் உயர் அதிகாரியின் சர்வாதிகாரம் த்தால் சிதறடிக்கப்படும்.பல சர்வாதிகாரி கள் உருவாகிவிடுவர்.இதற்காகத்தான் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
100க்கு அல்லது 200க்கு சங்கம் அல்ல.மாதம் ரூ 150 அல்லது 200 கொடுத்து நாளிதழ் வாங்குபவர் 100ரூ கொடுத்து சங்க இதழுக்கு சந்தாதாரர் ஆகவெகுவாக யோசிப்பர்.
மிக சாதாரணமாக உணவகங்களிலோ,பொழுது போக்கு மையங்களிலோ பல ஆயிரங்கள் செலவிடும் நம் ஆசிரியர் நண்பர்கள் ஆண்டு உறுப்பினர் சந்தா உறுப்பாண்மை ரசீது பெற்றுவிட்டு மறந்தது போல் நடிப்பதும்,ஏமாற்றுவதும் மிகுந்த வலியைத் தந்துவிடுகிறது.காரணம்தனியார் மயம் என்கிற நுகர்வுக் கலாச்சாரமே!
எங்கேயாவது ஸ்பான்சர் பெற்று சங்கம் நடத்திவிடலாம்.ஆனால் யாருக்காக நடத்துகிறோம் என்கிற போது உணர்வுகள் வற்றிப்போகும்.ஊழியர் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாவிட்டால் சங்கங்கள் வருங்காலத்தில் அழிவுறநேரிடும்.
சங்க நிர்வாகிகள் எந்த சங்கமாக இருந்தாலும் பிச்சைக்காரர்கள் அல்ல என்பதை உணருங்கள்!!
முதலில் பணத்தை கொடுங்கள்.பின்னர் பேசுங்கள்.உற்சாக மனநிலை என்பது பணத்தால் வராது.ஆனால் ஊழியர் கள் ஆதரவு என்பதால் வரும்.
முடிந்தால் ஓரே ஓரு ஆண்டுமட்டும் சங்கநிர்வாகியாக இருந்து பாருங்கள்.பிறகு எப்போதும் நீங்கள் பேசிட மாட்டீர்கள்.
இதனை கொள்கை ரீதியாக கனிவோடு நேரத்தைச் செலவிடும தோழரகள்் அனைவருக்கும் கனிவோடு சமர்ப்பிக்கிறேன்.
9 January 2016
தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணி- 01.01.2016 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள்/முதுகலை மொழி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் - 1998 ஆண்டுவரை பணியில் சேர்ந்தவர்கள் விவரம் கேட்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணி- 01.01.2016 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள்/முதுகலை மொழி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் - 1998 ஆண்டுவரை பணியில் சேர்ந்தவர்கள் விவரம் கேட்கப்பட்டுள்ளது
1.1.2016 ன்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குதகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியலை தயார் செய்து அனுப்பி வைக்குமாறு பார்வையில் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் விவரத்தினை இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி தயார் செய்து இருபிரதிகளில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில்ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
படிவத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்கள் கண்டிப்பாக இணைத்திடல்வேண்டும்.
1. நியமன ஆணை 2. பணிவரன்முறை ஆணை 3. தகுதிகாண்பருவம் முடித்தஆணை 4. பதவி உயர்வு பெற்றிருப்பின் பதவிஉயர்வு ஆணை 5. துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்றதற்கான அரசிதழ்கள் நகல் 6. கல்வித்தகுதி 10,12,பட்டங்கள் ஆகியவற்றின் நகல்கள் . 7. TRB நியமனம் எனில் தர எண்ணிற்கானஆதாரம்.
30 December 2015
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக (TNHSPGTA) மாநில தலைவர் திரு.வே .மணிவாசகன் அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்
தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக 2015ம் ஆண்டு நிகழ்வுகள் ஒரு சிறப்பு பார்வை
மாநில தலைவர், வே.மணிவாசகன்,
மாநில பொது செயலாளர், இரா.பிரபாகரன், மதுரை.
மாநில பொருளாளர், ஆ.கிருஷ்ணன், வந்தவாசி.
மாநில அமைப்பு செயலாளர், இரா.புஸ்பராசு, நாமக்கல்.
மாநில தலைமைஇட செயலாளர், பொ.பாலசுப்ரமணியன், சென்னை
மாநில செய்தி தொடர்பாளர், ஆர்.செல்வம், தருமபுரி.
மாநில பிரசார செயலர், அ.க.வடிவேல், புதுகோட்டை.
மாநில மகளிர் அணி செயலாளர், திருமதி.கே.முத்துகுமாரி, தேனி.
மாநில சட்டத்துறை செயலாளர், இரா.சீனிவாசன், கிருஷ்னகிரி,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை
சார்பில் 28 மாவட்டங்களில் 01.04.15 அன்று கண்டன ஆர்பாட்டம்
மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களின்
அறிக்கை
தேர்வு அறைகளில் மாணவர்கள் துண்டு சீட்டு வைத்திருப்பதை பறக்கும் படை உறுப்பினர்கள் கண்டு பிடித்தால், அறை கண்காணிப்பாளர்கள்மீது
பணி இடை நீக்கம் போன்ற அதிரடியான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு வர அச்சப்படுவார்கள். ஆகவே பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளை கண்டித்து, 28 மாவட்டங்களில், முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 1.04.15 அன்று மாலை 5.00 மணி அளவில் கண்டன ஆர்பாட்டம் நடை பெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு
( R.செல்வம்)
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - மதுரை
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரை - சிவகங்கை ரோடு, அரசனுர் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 25.04.2015 அன்று மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையிலும் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன், மாநிலப் பொருளாளர் ஆ.கிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் இரா.புஷ்பராஜ், மாநில தலைமையிடச் செயலாளர் பொ.பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணிச் செயலாளர் க.முத்துக்குமாரி மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் சி.இரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் பெ.சரவணமுருகன் வரவேற்புரையாற்றினார் மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்.
தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் E.P.தங்கவேல் , மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலர் T.செல்வம் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஆறாவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கி நடுவண் அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்
- 1987-ல் ஒப்பந்த நியமன முதுகலை ஆசிரியர்களையும் 2004-முதல் 2006-வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களையும் அவர்கள் பணியேற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்ய வேண்டும்
- தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் முறையினை இரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்
- வரும் கல்வி ஆண்டு முதல் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு நான்கு பருவத் தேர்வு நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
- 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளின் கடுமையைக் கருதி தேர்வுப் பணிகளுக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தினை பின்வருமாறு உயர்த்தித் தர வேண்டும்
- நலத்துறைப் பள்ளிகள் மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்
- கடந்த ஆண்டு அனைத்து இடங்களும் மறைக்கப்பட்டு பணியிட மாறுதல் நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் நடத்தப்பட வேண்டும்
5.7.15
முதுகலை ஆசிரியர்களுக்ககான கலந்தாய்வை