புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

18 March 2017

ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்.

தமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்.தமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் விதிகள் விதி 41A ன்படி பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருப்பு காலம் உள்ள நிலையில் ஒரு அரசு பணியாளர் கொடுக்கும் விலகல் கடிதத்தை உடனே உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள கூடாது. ஆனால் உயர் அதிகாரிகள் விதி 41(b)யின்படி ஒரு அரசு ஊழியர் விலகல் கடிதத்தை கொடுத்து அது ஏற்றுக் கொண்ட பிறகு அந்த கடிதத்தை அரசு ஊழியர் திரும்ப பெறவே முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. விதி 41A - மூன்று காரணிகளை உள்ளடக்கியது. (1)- 3 மாதங்களுக்கு குறைவில்லாமல் பணி விலகல் குறித்து ஓர் அறிவிப்பை கொடுக்க வேண்டும். (2)- அதனை வேலை அளித்த அதிகாரமுடைய நபர் ஏற்றுக் கொள்ள வேண்டும். (3)- அளிக்கப்பட்ட பணி விலகல் அறிவிப்பை திரும்ப பெறுதல் அறிவிப்பு குறித்து விதி 41A(a) ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வது குறித்து தகுதி பெற்ற அதிகாரி குறிப்பிட்ட காலஅவகாசம் அளித்து, அந்த பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டது குறித்து அல்லது நிராகரித்தது குறித்து காரணங்களை குறிப்பிட்டு ஓர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதிகாரம் பெற்ற நபர் பணி விலகல் குறித்து எந்தவொரு உத்தரவையும் அறிவிப்பு காலத்திற்குள் பிறப்பிக்க வில்லை என்றால் விதி 41A(c) ன்படி அந்த பணி விலகல் கடிதம் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். பணி விலகல் குறித்து அறிவிப்பு கொடுக்கப்பட்டதற்கு பின்னர், அந்த பணி விலகல் அறிவிப்பின் மீது ஓர் உத்தரவினை பிறப்பிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும் அது தன்னுடைய பணியை விட்டு விலகுவதாக அறிவிப்பு கொடுத்த அரசு ஊழியரை பாதிக்காது, எனவே ஒரு அரசு ஊழியர் பணியை விட்டு விலகுவதாக ஒரு கடிதத்தை கொடுத்த பின்னர் 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்தால் அந்த அரசு ஊழியரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 19361/2014 DT - 16.06.2016, G. Parameshwari Vs Register, Chennai high Court and Others (2016-5-CTC-161)

23 January 2017

TNHSPGTA State General Body meeting Held in Thanjavur on 22.1.17 at St.Antony's HSS

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கழக மாநிலப்பொதுக்குழுகூட்டம

           22.01.2017 அன்று வீரம் பொருந்திய தஞ்சை மண்ணில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப்பொதுக்குழு, மாநிலத் தலைவர் முனைவர் *திரு.வே. மணிவாசகன்*  

 நடைபெற்றது.மாநில தலைவர் சிறப்புரை ஆற்றினார்.💐


அதனைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் திரு. இரா.பிரபாகரன் அவர்கள் 20 தீர்மானங்கள் வாசிக்க, அத்தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டன. 



 அப்பொதுக்குழுவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிருந்தும் மாநில, மாவட்ட  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


 💐மேலும்  நமது தருமபுரி மாவட்டத்தின் சார்பாக மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம்,  மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலாளர் T.செல்வம், மாவட்ட பொருளாளர்,  சுப்பிரமணி மற்றும்  மாவட்டப்  செய்தி தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டோம். .💐


அந்தந்த மாவட்டத்தின் சார்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் அரசு பொதுத் தேர்வுப் பணி உழைப்பூதியத்தை உயர்த்தக் கோரி 

⚫⚫⚫⚫

இரண்டு கட்ட 

போராட்டங்கள்

 ⚫⚫⚫


1. துறை அலுவலர்,பறக்கும் படை அலுவலர் கூட்டங்கள்  புறக்கணிப்பு செய்வது.


 2. சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முழு மனதாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்  கொள்கிறோம்.

 அதனை வெற்றியடைய செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது என்பதால் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து போராட்டம் வெற்றியடையச் செய்ய  வேண்டுகிறோம். மாநில பொதுக்குழுவை மிகச்சிறப்பான முறையில்  அனைத்து விதத்திலும் பாராட்டும் விதத்தில் நடத்திய தஞ்சை மாவட்டத் தலைவர் ,மாவட்ட தலைவர்,குமார் மாவட்ட செயலாளர் கோபிசந்தர் மற்றும் பொறுப்பாளர்கள், அம்மாவட்ட முதுகலை ஆசிரிய நண்பர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த  அனைவருக்கும்  மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.💐


 ஜி.ஆரோக்கியம்

மாவட்ட செய்தி தொடர்பாளர்,   தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், 

தருமபுரி மாவட்டம்.*


மாநில பொதுக்குழு தீர்மானங்கள